Breaking News

மத்தள நெல் களஞ்சியசாலையை விமான நிலையத்திடம் ஒப்படைக்க தீர்மானம்


மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை சந்தைப்படுத்தியவுடன் அந்த இடத்தை விமான நிலையத்துக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்தில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்ட 50 மெட்ரிக் டொன் நெல் மத்தள விமான நிலையத்திலுள்ள கைவிடப்பட்ட ஒரு அறையில் களஞ்சியப்படுத்தப்பட்டது.

தற்காலிக ஒரு தீர்வு முயற்சியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. நெல் சந்தைப்படுத்தும் ஏலத்துக்கான கேள்வி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஓரிரு நாட்களில் மத்தளயிலுள்ள நெல்லை சந்தைப்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் அவர் மேலும் . கூறியுள்ளார்.