Breaking News

முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது தமிழர்களின் மௌனத்தை ஏற்க முடியாது!



கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது, தமிழ் மக்கள் மௌனமாக இருந்தமையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்தமை தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரச கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் வடக்கிலிருந்த சுமார் 1 இலட்சம் முஸ்லிகள் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.