Breaking News

வெள்ள அனர்த்தம் தொடர்பிலான கிளிநொச்சியில் விஷேட கூட்டம்



எதிர்வரும் பருவகால மழையின்போது வெள்ளப்பெருக்கும் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்வரும் பருவ பெயர்ச்சியின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.