Breaking News

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது.


இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்­பா­லான போட்­டி­களில் பங்­கேற்று விளை­யாடி இருந்­தன.

13ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்­டியை பங்­க­ளாதேஷ் நடத்­து­கி­றது. சிங்­கப்­பூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்­டத்தில் இந்த முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அடுத்த ஆண்டு பெப்­ர­வரி 24ஆம் திகதி முதல் மார்ச் 6ஆம் திகதி வரை நடக்­கி­றது. பங்­க­ளா­தேஷில் தொடர்ந்து 3ஆவது முறை­யாக ஆசிய கிண்ணப் போட்டி நடை­பெ­று­கி­றது.


இந்த ஆசிய கிண்ணக் கிரிக்கெட் 20 ஓவர் முறையில் நடக்­கி­றது. தற்­போது முதல் முறையாக 20 ஓவர் முறையில் இப்போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.