Breaking News

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு


நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து மாணவிகள் இரு பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 39 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

மேலும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.