Breaking News

நாங்கள் தமிழ் மக்­களின் எதி­ரி­க­ளல்லர்! மாறாக தமி­ழீழம் கோரு­கின்­ற­வர்­க­ளையே எதிர்க்­கின்றோம்

நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. தமிழர் சமு­தா­யத்தில் சிங்­கள மக்­க­ளை­வி­டவும் குண­சீ­லர்கள் உள்­ளனர் என்­பதை எம்மால் மறுக்க முடி­யாது. ஆனால் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்றோம் என்ற போர்வையில் தமி­ழீழம் கோரி நாட்டில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முன்­னிற்கும் தரப்­பி­ன­ருக்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

நாட்டில் உள்­ளக பொறி­முறை என்ற பெயரில் நிறு­வப்­ப­ட­வுள்ள யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் நீதி­மன்­றத்தின் நீதி­ப­திகள் குழு­வுக்கு சம்­பளம் மற்றும் நீதி­மன்ற வளா­கத்தை நிறுவு­வ­தற்­கான நிதி என்பவற்றையும் வழங்க நோர்வே அர­சாங்கம் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தமி­ழீ­ழத்தின் வரை­படம் வன்னி, ஜெனிவா, நியூயோர்க் என்ற தலைப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­ச­வினால் எழு­தப்­பட்ட நூல் கொழும்பு 7, ஹெக்டர் கொப்­பே­க­டுவ கம­நல மத்­தி­ய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் வெளி­யிட்டு வைக்­கப்பட் ­டது. இந்த நிகழ்வில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்த நிகழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான குமார வெல்­கம, டலஸ் அழகப்­பெ­ரும, திஸ்ஸ விதா­ரண, உதய கம்­மன்­பில, முன்னாள் நீதி­ய­ரசர் சரத் என் சில்வா உள்­ளிட்­டோரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் மாகாண சபை உறுப்­பி­னர்கள் பலரும் கலந்­து­கொண்­டனர்.

இந்­நி­கழ்வில் அவர் மேலும் உரை­யாற்று ­கையில், புலி­க­ளுடன் சமா­தான உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ள­ப­்பட்ட போது முன்னாள் அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் எதிர்ப்­பினால் எமது நாட்டை அன்று காப்­பாற்­றிக்­கொள்ள முடிந்­தது.அது போன்ற திட்­டங்கள் இன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்டு நாட்டில் பிளவு ஏற்­பட ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது என்­ப­தற்­கா­கவே நாம் புத்­தகம் வாயி­லாக நாட்டு மக்­களை தெளி­வு­ப­டுத்த முயற்­சிக்­கின்றோம்.

நாம் இவ்­வாறு எமது தேசியம் பற்றி பேசும் போது தமிழர் சமு­தா­யத்தில் நாம் இன­வா­தி­க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டுள் ளோம். ஆனால் நாம் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். தமிழர் சமு­தா­யத்தில் சிங்­க­ள­வர்­களை விடவும் குண­சீ­லர்கள் பலர் உள்­ளனர் என்­பதை நாம் மறுக்­கவும் இல்லை.

ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைக்­குரல் கொடுப்­ப­தா­கவும் அவர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும் கூறிக்­கொண்டு தமி­ழீழம் என்ற நோக்­கத்தில் பய­ணிப்­ப­வர்­களை நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. இவர்­களின் தேவைக்­கா­கவே சர்­வ­தே­சமும் செயற்­ப­டு­கின்­றது.

அதனால் நாட்டின் இரா­ணு­வத்­தினர் மீது சுமத்­தக்­கூ­டிய அதி­க­பட்ச குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி அவர்­களை நீதி­மன்றம் வரையில் வரச்­செய்­துள்­ளது. ஒரு நாட்டின் அர­சாங்கம் தமது நாட்டை பாது­காப்­ப­தற்­காக போராட்டம் நடத்­து­வதில் எவ்­வித சட்­ட­மீ­றலும் இல்லை. உல­க­ளவில் யுத்த குற்றம் செய்­துள்ள அமெ­ரிக்கா எமது நாட்டை காப்­பாற்ற போரா­டிய இரா­ணு­வத்­தி­னரை தற்­போது குற்­ற­வா­ளி­க­ளாக்க முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. தற்­போ­தைய அர­சாங்­கமும் அதற்கு இணங்கிச் செயற்­ப­டு­கின்­றது.

சர்­வ­தேச சக்­திகள் இலங்கை இரா­ணு­வத்தின் திறனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கார­ணத்­தி­னா­லேயே இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றன. அதனை விளங்­கிக்­கொண்­டதால் தான் ரவி­நாத ஆரி­ய­சிங்க ஐ.நா. அறிக்­கையை மீளாய்வு செய்யக் கோரினார். ஆனால் வெளி­வி­வ­கார அமைச்சர் அறிக் கையை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அர­சாங்­கமும் தற்­போது இரா­ணு­வத்­தி­னரை முடக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது.

யுத்­தத்தில் 7000 பேர் மட்­டுமே இறந்­துள்­ளனர் என்று பர­ண­கம அறிக்கை குறிப்­பிடும் போது அதனை ஏற்­றுக்­கொள்ள மறுக்கும் அர­சாங்கம் சர்­வ­தேச சக்­திகள் 40000 பேர் யுத்­தத்தால் இறந்­துள்­ளனர் என்று நாட்டின் மீது குற்றம் சுமத்­தும்­போது அதை ஏற்­றுக்­கொள்­கின்­றது. அதற்­க­மைய உள்­ளக விசா­ரணை என்ற போர்வையில் சர்­வ­தேச விசா­ரணை நடத்தவும் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. அர­சாங்கம் இதனை உள்­ளக விசா­ரணை என்­கி­றது. ஆனால் குறித்த நீதி­மன்­றத்­திற்கு சர்­வ­தே­சத்தில் உள்ள நீதி­ப­திகள் பங்­கேற்­பதால் அவர்­களின் சம்­பள தொகை மற்றும் நீதி­மன்ற வளா­கத்தை நிறு­வுவ­தற்­கான நிதி ஆகி­ய­வற்றை நோர்வே அர­சாங்கம் வழங்க ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

தற்­போ­துள்ள சட்­டங்­களின் பிர­காரம் இரா­ணு­வத்­தி­னரை குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யா­துள்ள நிலையில் எதிர்­கா­லத்தில் அவர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக்கும் வகையில் அர­சாங்கம் சூட்சுமமாக சட்­ட­திட்­டங்­களை மாற்­றி­ய­மைக்கும். அதற்­க­மைய தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மற்றும் பொது­மக்கள் பாது­காப்புச் சட்டம் ஆகி­ய­வற்­றையும் சர்­வ­தேசம் நீக்கச் சொல்­கி­றது.

மறுபுறம் நாட்டில் மறைமுகமாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முயற் சிக்கின்றது. மாகாண சபை அதிகாரத்தை பயன்படுத்தி பாரதூரமான செயற்பாடுகளை நாட்டில் முன்னெடுக்கும் போது அதனைக் கட்டுப்படுத்த அராசாங்கத்திற்கு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் அவசியப்படும். தற்போதைய அரசாங்கம் அதனை மறந்து செயற்படுகின்றது. அரசாங்கத்திற்கு சார்பாக தற்போது மக்கள் விடுதலை முன்னணியும் செயற்படுகின்றது. அதனால் தான் நாட்டில் உள்ள பிரச்சினைகளை துறந்து விட்டு மக்கள் விடுதலை முன்னணி ஊழல்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றது என்றார்.