Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் என்ற பெயரில் கிரிமினல் குற்றவாளிகள் விடுதலை ! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கைதாகியவர்களில்
பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களில் அறுவர் கொலை மற்றும் போதைப்பொருட் கடத்தல் குற்றச்சாட்டுக்களில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் என்று நம்பகரமாக தெரியவந்துள்ளது.

தம்மை விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் போராட்டத்தினை திசை திருப்பும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகளில் 31பேரை பிணையில் விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் 31 பேர் விடுதலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் பரவலாக விளம்பரம் தேடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் அறுவர் கிரிமினல் குற்றவாளிகளான சிங்களவர்கள் என்று சிறைச்சாலை வட்டாரங்களின் ஊடாகத் தெரியவந்துள்ளது. இரட்டைக்கொலை, கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்களே அந்த அறுவரும் என்று தெரியவந்திருப்பதுடன் அவர்களில் ஒருவர் பாதாள உலகக்குழுக்களின் தலைவராகச் செயற்பட்டுவந்தவர் என்றும் சிறைச்சாலை வட்டாரங்களின் ஊடான தமிழ்கிங்டொத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் நடந்தது என்ன? – விளக்குகிறார் விக்கி (காணொளி)