Breaking News

தம்மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ராஜித்த விளக்கம்

எவன்காட் சம்பவம் தொடர்பாக தமக்கு எந்த தகவலும் வழங்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எவன்காட் தொடர்பாக எந்த தகவலும் தமக்கு வெளியிட வேண்டாம் என பிரமரால் சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு கூறியதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

அதன்போது தம்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக சிலர் சித்தரிக்க முனைந்ததாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த 16 ஆம் திகதி பிரேசிலில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் மாநாட்டி கலந்து கொள்ள சென்றிருந்ததாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.