Breaking News

நெடுந்தீவு கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள், நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் 14 பேரும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.அத்துடன், இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய மூன்று படகுகள் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று யாழ் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், அரசுடைமையாக்கப்படுமென இலங்கை மீன்பிடி அமைச்சர் தெரிவித்துள்ளiமை குறிப்பிடத்தக்கது.