Breaking News

இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிந்தது - ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது மே.இ.தீவுகள்



இலங்கை – மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் இலங்கை அணி 23 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் இது­வரை இலங்கை அணி விளையாடிய 10 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் ஒன்­பது போட்­டி­களில் தோல்­வியைத் தழு­வி­யுள்­ளது. ஒரு போட்­டியில் மாத்­தி­ரம்தான் வெற்­றி­பெற்­றுள்­ளது.

அதே நேரம் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்கு இது ஆறுதல் வெற்­றி­யாக அமைந்­தது. காரணம் இதற்கு முன் விளை­யா­டிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டிகள் அனைத்­திலும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி தோல்வி­ய­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நேற்று ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் பக­லி­ரவு ஆட்­ட­மாக நடந்த இப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மேற்­கிந்­தியத் தீவுகள் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

மேற்­கிந்­தி­யத்­தீ­வு­களின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மிங்­கிய பிளெட்சர் மற்றும் சார்ள்ஸ் ஆகியோர் அதி­ர­டி­யாகத் துடுப்­பெ­டுத்­தாடத் தொடங்க 6 ஓவர்­களில் 61 ஓட்­டங்­களைச் சேர்த்­தனர்.

அதன்­பி­றகு 7ஆவது ஓவரை மிலிந்த சிறி­வர்­தன வீசினார். அந்த ஒவரின் இரண்­டா­வது பந்­திற்கு முகம்­கொ­டுத்த பிளெட்சர் 23 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்­ட­மி­ழந்தார். அதன் பிறகு மார்லன் சாமு­வேல்ஸ்­வந்த வேகத்­தி­லேயே அதே ஓவரில் ஒரு ஓட்­டத்­துடன் ரன்­அவுட் முறையில் ஆட்­ட­மி­ழந்தார்.

அதன்­பி­றகு 34 ஓட்­டங்­களை பெற்று ஆடிக்­கொண்­டி­ருந்த சார்ள்ஸ், சிறி­வர்­த­னவின் பந்­து­வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்­ட­மி­ழந்து சென்றார். 31 ஓட்­டங்கள் பெற்று ஆடிக்­கொண்­டி­ருந்த பிராவோ மலிங்­கவின் பந்­து­வீச்சில் பிடி­கொ­டுத்து வெளி­யே­றினார்.

இறு­தியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

163 என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய இலங்கை அணிக்கு டில்ஷான் மற்றும் குசல் ஆகியோர் தொடக்­கத்தைக் கொடுத்­தனர்.

இந்த ஜோடி சற்று அதி­ர­டி­யாக ஆடி 2.4 ஓவர்­களில் 23 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் 12 ஓட்­டங்­க­ளுடன் குசல் ஆட்­ட­மி­ழந்தார். அதன் பிறகு டில்­ஷா­னுடன் ஜோடி சேர்ந்தார் ஷெஹான் ஜய­சூ­ரிய. இவர்­களின் இணைப்­பாட்டம் சற்று ஆறுதல் அளிக்க 30 ஓட்­டங்­க­ளுடன் ஜய­சூ­ரி­யவும் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்­த­டுத்து வந்த சந்­திமால் மற்றும் மெத்­தியூஸ் ஆகியோர் வந்த வேகத்­தி­லேயே வெளி­யே­றினர். டில்ஷான் 52 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் அனை­வரும் வந்­த­வே­கத்­தி­லேயே பெவி­லியன் திரும்ப 20 ஓவர்கள் நிறைவில் 139 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 23 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்த வெற்றியோடு சமநிலையில் முடித்தது மேற்கிந்தியத்தீவுகள்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீசிய பிராவோ 4 விக்கெட் டுக்களையும் ராம்போல் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.