Breaking News

நவம்பர் 27 நினைவு கூட்டத்திற்கான தடையை நீக்கியது சென்னை நீதிமன்றம்

தாயக விடுதலைக்கான ஈழப்போரில் 1989 தொடக்கம் 2009 வரை உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் வகையில் இரண்டு கூட்டங்களுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி சேலம் கொலத்தூர் மற்றும் அலமூர் பழனிச்சாமி மைதானம் ஆகிய இடங்களில் இந்தக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடைத்துள்ள நிலையில் அவ்விடங்களில் இன்று அஞ்சலிக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

திராவிடர் விடுதலைக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.

எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை மையமாகக்கொண்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கூட்டங்களுக்கான அனுமதி கிடைத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.