Breaking News

யாழ்.மாவட்ட வெள்ள நிவாரண பணிகளுக்காக 4.2 மில்லியன் ரூபா நிதி

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டின் யாழ்ப்பாணம், மன்னார், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அந்தவகையில், யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபாவும் மன்னார் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலதிக நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரித்துள்ளார்.

அடை மழைக்கு பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான மேலதிக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.