Breaking News

கைதிகளை பிணையில் விடுவிப்பதாகக் கூறுவது சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றுவதற்கே!- சுரேஷ்

தமிழ் அர­சியல் கைதிகள் பிணையில் விடு­விப்­ப­தாகக் கூறு­வது சர்­வ­தே­சத்­தையும் நாட்டு மக்­க­ளையும் ஏமாற்­று­வ­தற்கே. இது எந்­த­வித மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தாது எனத் தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பிணையில் விடு­விக்­கப்­பட்ட கைதி­களில் 6 பேர் போதை­வஸ்து பாவ­னையில் ஈடு­பட்ட சிங்­கள கைதிகள் என்றார். யாழில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் அர­சியல் கைதிகள் பலதரப்­பட்ட சிறைச்­சா­லை­க­ளிலும் உணவு தவிர்ப்பு போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இவர்­களில் புதிய மகசின் சிறைச்­சா­லை­யி­லுள்ள 14 அர­சியல் கைதிகள் வெ­லிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் பலாத்­கா­ர­மாக சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

அனு­ரா­த­புரம் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் உடையார் கட்டைச் சேர்ந்த ரைகஸ், முல்­லைத்­தீவு நிசாந்தன், யாழ்ப்­பாணம் கோபிநாத், வல்­வெட்­டித்­துறை துஷா ஆகியோர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

கண்டி போகம்­பறை சிறைச்­சா­லையில் மாத்­த­ளையைச் சேர்ந்த ரமேஷ்­குமார், கிளி­நொச்சி ஐனேசன், மாத்­தளை செல்­வ­குமார், சுரஜித், சிவ­குமார் யோக­ராஜா, மனோ­கரன், ரூபச் சந்­திரன், சுப்­பு­ராஜா, விக்­கி­ர­ம­சிங்க (இரா­ணுவம்) தேவ­ராஜா, சுந்­த­ர­மணி, இளங்கோ ஆகியோர் இய­லாத நிலையில் வைத்­தி­யர்கள் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் சிகிச்­சைக்­காக வற்­பு­றுத்­திய போதும் உண்­ணா­வி­ர­தத்தை மேற்­கொண்டு வரு­கி­றார்கள்.

அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஐந்­தா­வது நாளாக நீடித்து வரு­கின்ற நிலையில் சிகிச்­சை­யையும் மறுத்து வரு­கி­றார்கள். ஏற்­க­னவே இவர்கள் இரண்டு வாரத்­திற்கு முன்பும் உணவு தவிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக பல­வீ­ன­ம­டைந்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். நேற்­று­முன்­தினம் 28 தமிழ் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­வித்­த­தாக கூறிய நிலையில் இவர்­களில் 6 பேர் கொலை, கொள்ளை, கடத்தல், போதை­வஸ்து பாவனை தொடர் பில் கைது செய்­யப்­பட்டு தடுப் பில் இருந்­த­வர்­க­ளாவர். விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள வர்கள் 26 ஆண்கள், 2 பெண்­க­ளாவர். 

இவர்கள் ஒன்­றரை வரு­டங்­களுக்குள் குறிப்­பாக புதிய அரசின் ஆட்­சிக்கு பின்பும் ஆட்­சிக்கு முன்­பா­கவும் பிடிக்­கப்­பட்டு சிறைக்­குச்­சென்­ற­வர்கள். சட்­டமா அதிபர் இவர்கள் தொடர்பில் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. பிர­தமர், ஜனா­தி­பதி ஆகியோர் கைதி­களை விடு­விப்­ப­தற்கு கொள்கை ரீதியில் நட­வ­டிக்கை எதுவும் எடுக்­க­வில்லை என்றார்.