Breaking News

பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டாராம் - மங்கள கூறுகிறார்

தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று குறிப்பிட்டு ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மோல்டாவில் நடைபெற்றுவரும் 24 வது பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகள் வன்முறையில் மட்டுமே ஈடுபட்டதாகவும், மக்களின் எதிர்ப்பார்ப்பினைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், பொதுநலவாய நாடுகளுக்கு மத்தியில் காணப்படும் இனவாதம் மற்றும் தீவிரவாதம் போன்றவற்றை தடுக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.