Breaking News

வித்தியா படுகொலையை விசாரிக்க நீதிபகள் குழு : நீதியமைச்சர்

யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத் துவதற்காக நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழப்பாணத்திற்கு சென்றிருந்த நீதியமைச்சர் யாழ் மேல்நீதிமன்றத்திற்கு சென்றபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அவர் யாழ்.மேல்நீதிமன்றில் நீதிபதிகள், நீதிவான்கள், சட்டத்தரணிகளுன் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களினால் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடாந்து தெரிவித்த அவர், ‘புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட குற்றச் சம்பவம் பற்றிய பொலிஸ் விசாரணை நிறைவடையும் தறுவாயில் உள்ளது.அந்த வழக்கு விசாரிக்க நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு குறித்த வழக்கை விசாரிக்கும்’ என்றும் கூறினார்.