Breaking News

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சரத் பொன்சேகாவிடமும் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போதே, 2009 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் லசந்த விக்கிரமதுங்க இரத்மலானை உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகாவான, பிரிகேடியர் கெப்பிட்டிவலன, இரத்மலானை உயர் பாதுகாப்பு வலயத்துக்குப் பொறுப்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.