Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு உயர்த்தப்படக்கூடாது – வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கக் கூடாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த கொடுப்பனவு 500 ரூபாவிலிருந்து 20000 ரூபா வரையில் உயர்த்தப்பட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஊழியர்களின் சம்பளங்கள் 2500 ரூபாவினால் உயர்த்தப்படாது இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.