Breaking News

சிம்புவின் பாஸ் போர்ட்டை முடக்கி விட்டார்களா ?

நடிகர் சிம்பு சமீபத்தில் பீப் சாங் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார். பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள், வழக்குகள் குவிந்தாலும் சிம்புவின் பீப் சாங் இந்தளவுக்கு பிரச்சனையை எதிர்ப்பதற்கு உகந்ததா என்று புரியவில்லை.

இன்று காலை சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் கண்ணீர் மல்க தன் மகன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொன்னார்.

இது ஒருபுறமிருக்க சிம்பு கைது செய்ய தடையில்லை என்று தீர்ப்பு வர 5 தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் க்ரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு வெளிநாட்டில் தப்பிவிடக்கூடாது என்று அவரது பாஸ்போர்ட்டை சைபர் க்ரைம் காவல்துறையனர் முடக்கி விட்டதாக ஒரு செய்தி வருகிறது.

எப்படியும் அனிருத் மற்றும் சிம்பு சிறை செல்வதிலிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை மாட்டியுள்ளதாக செய்திகள் வருகிறது.