Breaking News

டுபாய், சிங்கப்பூர் வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க சுவிட்ஸர்லாந்திடம் உதவி

முன்னைய ஆட்சியாளர்கள் டுபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நிதியை மீட்பதற்கு சுவிட்ஸர்லாந்து
நாட்டின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

முன்னைய ஆட்சியாளர்கள் டுபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நிதியை மீட்பதற்கு சுவிட்ஸர்லாந்து நாட்டின் இலாப நோக்கம் இல்லாது இயங்கும் ஒரு தனியார் கம்பனியின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அந்த நாட்டுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.