Breaking News

பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஒரு தாக்­குதல் இலக்­கா­க­வுள்­ள­தாக பொலிஸார் எச்­ச­ரித்­துள்ள
நிலை­யிலும் அவர் தனது நத்தார் தின உரையின் போது துப்­பாக்கி ரவை துளைக்­காத மேலா­டையை அணி­வ­தற்கு மறுத்­துள்ளார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் அண்­மையில் 130 பேர் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக அமைந்த தாக்­கு­தல்­க­ளை­யொத்த தாக்­கு­தல்­களை இத்­தா­லிய ரோம் நகரில் தாம் நடத்­த­வுள்­ள­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அண்­மையில் தம்மால் வெளியி­டப்­பட்­டி­ருந்த காணொளிக் காட்­சி­களில் அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­தனர்.

இது தொடர்பில் பாப்­ப­ர­சரின் பேச்­சாளர் தெரி­விக்­கையில்,

பாப்­ப­ரசர் அந்த அச்­சு­றுத்தல் தொடர்பில் அறிந்­துள்ளார் எனவும் ஆனால் அவர்
ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு அஞ்­ச­வில்லை எனவும் கூறினார். இந்த வரு­டத்­துக்­கான நத்தார் தின உரையின் போது தான் பய­ணிக்கும் வாக­னத்தில் குண்டு துளைக்­காமல் இருப்­ப­தற்­கான மேல­திக பாது­காப்பை மேற்­கொள்­வ­தற்கும் பாப்­ப­ரசர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார் எனவும் கூறினார்.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ரோம் மீதான தாக்­குதல் திட்­டத்தில் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் தலைவர் என்ற வகையில் பாப்­ப­ரசர் பிர­தான தாக்­குதல் இலக்­காக விளங்­கு­வ­தாக க­ரு­தப்­ப­டு­கி­றது. எனினும் பாப்­ப­ர­சரின் நத்தார் தின உரையின் போது அவ­ருக்கு பாது­காப்பை வழங்கும் நட­வ­டிக்­கையில் பெரு­ம­ளவு பொலி­ஸாரும் படை­யி­னரும் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக வத்­திக்கான் அறி­வித்­துள்­ளது.

“பாப்­ப­ரசர் (ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்­தான) அனைத்து அச்­சு­றுத்­தல்கள் தொடர்­பிலும் அறிந்­துள்ளார். ஆனால் அவர் மக்­க­ளுடன் தொடர்பு கொள்ளும் சந்­தர்ப்­பத்தை இழக்க விரும்­ப­வில்லை" என வத்­திக்­கா­னி­லுள்ள அருட்­தந்­தை­களில் ஒரு­வ­ரான சிரோ பென­டிட்­ரினி தெரி­வித்தார். ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் காணொளிக் காட்­சியில் தீவி­ர­வா­தி­களின் கறுப்புக் கொடி சின்­னத்­துடன் ரோமி­லுள்ள சென். பீற்றர்ஸ் தேவா­ல­யத்தின் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.