Breaking News

நல்லெண்ண செயற்பாடு

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு ஒரு வரு­ட­மா­கின்ற நிலையில் வட­ப­குதி மீது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகுந்த அக்­கறை கொண்­டி­ருக்­கின்ற ஒரு போக்கு உத­ய­மா­கி­யி­ருக்­கின்­றது. 

நத்தார் தினத்­தை­யொட்டி யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற ஒளி­வி­ழாவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டார். இந்த விழா நடை­பெற்ற ஒரு மாதம் முடி­வ­டை­வ­தற்­கி­டையில் யாழ்ப்­பா­ணத்தில் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள தேசிய பொங்கல் விழாவில் மீண்டும் ஜனா­தி­பதி கலந்து கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்ல. அவ­ருடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்­ள­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

நத்தார் ஒளி­வி­ழாவில் கலந்து கொண்ட ஜனா­தி­ப­தி­யி­னு­டைய யாழ்ப்­பாண வரு­கை­யின்­போது, மேலும் ஒரு தொகுதி காணிகள் வலி­காமம் வடக்கில் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படும் என்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன. அதற்­கேற்ற வகையில் வலி­காமம் வடக்கில் 700 ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்­டன. இந்தக் காணிகள் ஜனா­தி­ப­தி­யினால் தேசிய பொங்கல் விழா­வின்­போது உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படும் என்ற அறி­வித்­தலும் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது. 

தமிழ் அர­சியல் கைதிகள் தங்­க­ளு­டைய விடு­த­லைக்­காக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­த­போது, நவம்பர் மாதம் 7 ஆம் திக­திக்­கி­டையில் அவர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அந்த உத்­த­ர­வா­தத்தை ஏற்று, தமிழ் அர­சியல் கைதிகள் தமது போராட்­டத்தைக் கைவிட்­டி­ருந்­தார்கள். 

ஆனாலும், ஜனா­தி­பதி தனது உறு­தி­மொ­ழியை குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் நிறை­வேற்றத் தவ­றி­யி­ருந்தார். அதனால், கைதி­களின் விடு­தலை இழு­பறி நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருந்­தது. இருப்­பினும் குறிப்­பிட்ட ஒரு தொகை­யி­னரே பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். எஞ்­சி­ய­வர்­களை விடு­தலை செய்­வதில் பல்­வேறு சிக்­கல்கள் இருப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்­த­துடன், அந்தப் பொறுப்பை சத்­த­மின்றி ஜனா­தி­ப­தியும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சட்­டமா அதி­ப­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தனர். 

சட்­டமா அதிபர் அவர்­களை விடு­தலை செய்­ய­வில்லை. பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்கள் தவிர்ந்த ஏனைய 200க்கும் மேற்­பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­மாட்­டார்கள். அவர்­க­ளுக்கு விடு­தலை கிடை­யாது என்ற தகவல் அரச மட்­டங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தது. அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அர­சியல் கைதிகள் என எவரும் சிறைச்­சா­லை­களில் கிடை­யாது என்று முகத்தில் அறைந்­தாற்­போல தெரி­வித்­தி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், சிறைச்­சா­லை­களில் உள்ள 215 வரை­யி­லான தமிழ்க் கைதிகள் பயங்­க­ர­வா­திகள் என்றும், அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் அவர் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­பட வேண்டும் என்­பதில் அக்­கறை கொண்­டி­ருந்த தமிழ், முஸ்லிம் மக்கள், 2015 ஜன­வரி மாத ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவைத் தோற்­க­டித்து புதிய வர­வாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தெரிவு செய்­தி­ருந்­தார்கள். புதிய ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, தாங்கள் அளித்த அர­சியல் ஆத­ரவைக் கவ­னத்திற் கொண்டு தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்பார். 

கடும்­போக்கு அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷவைப் போலல்­லாமல், மென்­போக்­கு­டை­ய­வ­ரா­கவும், தமிழ் மக்கள் மீது அக்­கறை கொண்­ட­வ­ரா­கவும் அவர் செயற்­ப­டுவார் என்று நம்­பி­யி­ருந்­தார்கள். இத்­த­கைய நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் அர­சியல் கைதிகள் தமக்கு புதிய ஜனா­தி­பதி பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்வார் என்று மிகுந்த எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருந்­தார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது. 

அர­சியல் கைதிகள் என்று எவரும் கிடை­யாது என்றும், 200க்கும் மேற்­பட்­ட­ பயங்­க­ர­வா­தி­களே சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தா­கவும், அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் பகி­ரங்­க­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­தி­ருந்­தமை தமிழ் அர­சியல் கைதி­களின் மனங்­களை நோக­டித்­துள்­ளது என்றே கூற வேண்டும். 

இன்னா செய்­தாரை ஒறுத்­தாரா......?

இந்த நிலை­யில்தான் தனது ஜனா­தி­பதி பத­வியின் ஒரு­வ­ருட நிறைவு விழாவில் தமிழ் அர­சியல் கைதி­யா­கிய சிவ­ராஜா ஜெனிபன் என்­ப­வரை பொது மேடையில் பகி­ரங்­க­மாகக் கைகொ­டுத்து, அவ­ரு­டைய முதுகில் தட்­டிக்­கொ­டுத்து, பொது­மன்­னிப்­ப­ளித்து தண்­ட­னையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடு­தலை வழங்­கி­யி­ருந்தார். 

சிவ­ராஜா ஜெனி­பனின் சொந்த இடம் அச்­சு­வேலி. விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் உறுப்­பி­ன­ராக அவர் செயற்­பட்­டி­ருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றில் மட்­டக்­க­ளப்பில் இருந்து வவு­னியா நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்­டி­ருந்த அவரை சிவி­லு­டையில் வந்­த­வர்கள் திடீ­ரென கைது செய்­தார்கள். இந்தச் சம்­பவம் மின்­னே­ரியா பகு­தியில் நடை­பெற்­ற­தாக ஜெனி­ப­னுக்கு நினைவு. 

'பேருந்தில் வந்து கொண்­டி­ருந்­த­போதே என்னைக் கைது செய்­தார்கள். ஊட­கங்­களில் வெளி­வந்­தி­ருந்­ததைப் போன்று என்­னிடம் கிளேமோர் கண்­ணி­வெ­டியும் இல்லை. ஒரு மண்­ணாங்­கட்­டியும் இல்லை.' என தன்னைக் கைது செய்த சம்­பவம் குறித்து ஜெனிபன் பொது­மன்­னிப்பு பெற்று வீடு திரும்­பிய பின்னர் தெரி­வித்தார். 

என்னைக் கைது செய்து, விசா­ரணை என்ற போர்­வையில் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைத்­தார்கள். இப்­போ­தைய ஜனா­தி­ப­தி­ மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னைய அர­சாங்­கத்தில் விவ­சாய அமைச்­ச­ராக இருந்­த­போது, அவரைக் கண்­ணி­வெடி தாக்­கு­தலின் மூலம் படு­கொலை செய்­வ­தற்கு சதித்­திட்டம் தீட்­டி­யி­ருந்­த­தாகத் தனக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக அவர் விபரம் தெரி­வித்தார். 

'பொலன்­ன­றுவை மேல் நீதி­மன்­றத்தில் இரண்டு வழக்­கு­களும், யாழ். மேல் நீதி­மன்­றத்தில் ஒரு வழக்­கு­மாக எனக்­கெ­தி­ராக மூன்று வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால் நான் இப்­போது உள்ள நிலையில் எனக்கு எதி­ர­தாகப் பதிவு செய்­யப்­பட்ட வழக்­குகள் பற்­றிய விப­ரங்­களை நான் வெளி­யி­டவோ அல்­லது அவை பற்றி கருத்­துக்­களை வெளி­யி­டவோ விரும்­ப­வில்லை' எனவும் அவர் கூறினார். 

'ஓடு­கின்ற பேருந்தில் வைத்தே என்னைக் கைது செய்­தார்கள். பத்து வரு­டங்­க­ளாக மோச­மான சிறை வாழ்க்கை வாழ்ந்­ததன் பின்னர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லெண்ணச் செயற்­பாட்டில் பொது­மன்­னிப்பு பெற்று நான் விடு­த­லை­யா­கி­யி­ருக்­கின்றேன். என்­னு­டைய வழக்­குகள் தொடர்­பான விப­ரங்­களை நான் தெரி­வித்தால், அவைகள் திரி­வுப­டுத்­தப்­படக் கூடும். ஏனெனில் பேருந்தில் பயணம் செய்­த­போது கைது செய்­யப்­பட்ட என்னை, கிளேமோர் குண்­டு­ட­னேயே கைது செய்­த­தாக ஊட­கங்கள் அப்­போது செய்தி வெளி­யிட்­டி­ருந்தன. எனவே, நான் கூறு­கின்ற தக­வல்­களும் திரி­வு­ப­டுத்­தப்­படக் கூடும்' என்று தனது அச்­சத்தை வெளி­யிட்டார். 

தன்­னு­டைய அச்­சத்­திற்­கான கார­ணத்­தையும் அவர் விப­ரித்தார். 

'நான் வெளி­யி­டு­கின்ற தக­வல்கள் திரிவு­ப­டுத்­தப்­பட்டால், அது, பெருந்­தன்­மை­யுடன் எனக்கு பொது மன்­னிப்­ப­ளித்த ஜனா­தி­ப­தியின் நல்­லெண்­ணத்­திற்கும், நல்­லி­ணக்­கத்­திற்­கான அவ­ரு­டைய பெருந்­தன்மை வெளிப்­பாட்­டிற்கும் ஊறு விளை­விக்கக் கூடும். எனக்கு இவ்­வாறு ஒரு விடு­தலை கிடைக்கும் என்று நான் கன­விலும் எண்­ணி­யி­ருக்­க­வில்லை. எதிர்­பார்த்­தி­ருக்­க­வு­மில்லை. என்னை விடு­தலை செய்­த­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு நானும் எனது குடும்­பத்­தி­னரும் எமது மன­மார்ந்த நன்­றி­களை எமது சிரந்­தாழ்த்தி தெரி­வித்துக் கொள்­கிறோம். எனக்கு மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்த ஜனா­தி­ப­தி­யி­னு­டைய பெருந்­தன்­மையும் அவ­ரு­டைய நல்­லி­ணக்­கத்­திற்­கான செயற்­பாடும் தொடர வேண்டும். 

இன்னும் சிறைச்­சா­லை­களில் வாடிக்­கொண்­டி­ருக்­கின்ற தமிழ் அர­சியல் கைதிகளின் விடு­த­லைக்கு அவ­ரு­டைய பெருந்­தன்­மை­யு­டைய செயற்­பா­டுகள் அவ­சி­ய­மா­கின்­றன. எனவே, அந்த பெருந்­தன்­மைக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­வதை நான் விரும்­ப­வில்லை. அதன் கார­ண­மா­கவே எனக்கு என்ன நடந்­தது என்­பது பற்­றிய வழக்கு விப­ரங்­களை நான் வெளி­யிட விரும்­ப­வில்லை' என்­ற­தொரு நீண்ட விளக்­கத்தை ஜெனிபன் அளித்தார். 

ஜனா­தி­ப­தியின் பெருந்­தன்மை மீத­முள்ள அர­சியல் கைதி­களை இரட்­சிக்­குமா?

பத்து வருட சிறை­வாழ்க்கை என்­பது கொடுமை மிகுந்­தது என்று ஜெனிபன் வர்­ணித்தார். என்ன செய்ய வேண்டும், எப்­படி செய்ய வேண்டும், எப்­போது செய்ய வேண்டும் என்­பதை மற்­ற­வர்கள் தீர்­மா­னிப்­ப­தென்­பது கொடு­மை­யிலும் கொடுமை. பத்து வரு­டங்­க­ளாக ஒவ்­வொரு நிமி­டமும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்­கையின் வேத­னையை சொற்­களில் விப­ரிக்க முடி­யாது. அந்த நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருப்­ப­வர்கள் என்ன செய்­தார்கள் என்ன குற்றம் புரிந்­தார்கள் என்­பதை, அவர்கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான சந்­தர்ப்­பங்­களில், அவர்­களின் வகி­பாகம் என்ன என்­பதை ஆழ்ந்து நோக்க வேண்­டி­யது அவ­சியம். 

அவ்­வாறு ஆழ்ந்து நோக்­காமல் வெறு­மனே தமிழ் அர­சியல் கைதி­களை எழுந்த மான­மாகக் குற்றம் சுமத்திக் கதைப்­பது சரி­யல்ல' என்று சுட்­டிக்­காட்­டிய ஜெனிபன், சிறைச்­சா­லை­களில் உள்­ள­வர்கள் சந்­தர்ப்ப சூழ்­நி­லை­களால் கைதி­க­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள் என்றும், அவர்­களை ஜனா­தி­ப­தியும் இந்த அர­சாங்­கமும் விடு­தலை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து மேற்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் முன்­வைத்­துள்ளார். 

தமிழ் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது, இதற்­காக பல போராட்­டங்கள் சிறைச்­சா­லை­க­ளுக்­குள்­ளேயும், சிறைச்­சா­லை­க­ளுக்கு வெளியில் பர­வ­லா­கவும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தக் கோரிக்­கை­யிலும், போராட்­டங்­க­ளிலும் நியாயம் இல்­லாமல் இல்லை. 

யுத்தம் முடி­வுக்கு வந்து ஏழு வரு­டங்­க­ளா­கின்­றன. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக முன்­னைய அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் அந்த அறி­விப்பு வெறும் வாய்ப்­பந்­த­லா­கவே இருந்­தது. யுத்­தத்தை முன்­னெ­டுத்த தலை­வர்கள் அழிக்­கப்­பட்டும், சில தலை­வர்­களை முன்­னைய அர­சாங்கம் தனக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளாக வைத்து சுக­போ­கங்­க­ளையும் வச­தி­க­ளையும் அளித்­துள்ள நிலையில், உண்­மை­யா­கவே, நல்­லி­ணக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால், தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரும் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். அதுவே யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­வர்­களின் பெருந்­தன்­மை­யா­கவும் நல்­லெண்­ணத்தின் சிறப்­பான வெளிப்­பா­டா­கவும் அமைந்­தி­ருக்கும். 

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களும் இந்த மனி­தா­பி­மான வெளிப்­பாட்டைக் கவ­னத்­திற்­கொண்டு, தமக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களை மன்­னித்து நாட்டில் நம்­பிக்­கை­யோடு நல் வாழ்க்கை ஒன்றை ஆரம்­பித்­தி­ருப்­பார்கள். ஆனால் அது முன்­னைய அர­சாங்­கத்தில் நடை­பெ­ற­வில்லை. 

நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் நிலை­நி­றுத்­து­வ­தாகக் கூறி, ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்ள புதிய அர­சாங்கம், முன்­னைய அர­சாங்­கத்தின் வழி­மு­றை­களில் இருந்து விலகி, புதிய பாதையில் பய­ணிக்க வேண்டும் என்றே பாதிக்­கப்­பட்ட மக்கள் விருப்பம் கொண்­டுள்­ளார்கள். அத்­த­கைய புதிய அர­சியல் பாதையில் அர­சாங்­கத்­துடன் முழு நம்­பிக்கை வைத்து பயணம் மேற்­கொள்­வ­தற்கும் அவர்கள் தயா­ராக இருக்­கின்­றார்கள். 

இந்த நிலையில் தன்­னைக்­கொலை செய்­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார் என்று குற்றம் சாட்டப்­பட்ட ஒரு­வரை, இன்னா செய்­தாரை ஒறுத்தல் என்ற தமிழ்ப் பண்­பாட்­டிற்­க­மை­வாக பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­துள்ள ஜனா­தி­பதி தனது நல்­லெண்­ணத்தை ஏனைய கைதி­களின் விட­யத்­திலும் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் மறு­வாழ்க்கை விட­யத்­திலும் வெளிப்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

புதிய அர­சியல் பயணம் தேவை

ஜெனிபன் என்ற தமிழ் அர­சியல் கைதியை விடு­தலை செய்­துள்ள ஜனா­தி­ப­தியின் செயற்­பாடு, அவ­ரு­டைய ஒரு வருட ஆட்­சிக்­கால நிறைவு விழாவின் ஓர் அர­சியல் நோக்கம் கொண்ட செயற்­பாடு என்ற மிகவும் குறு­கிய வட்­ட­த்­திற்குள் அடங்­கி­விடக் கூடாது. 

தனது ஒரு வருட ஆட்சி நிறை­வின்­போது வட­ப­கு­திக்கு – யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சத்­திற்கு பண்­டி­கை­களைக் கொண்­டா­டு­வ­தற்­காக, அதன் ஊடாக நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக விஜ­யங்­களை மேற்­கொள்­வ­தென்­பது, வெறும் அர­சியல் செயற்­பா­டாகக் கரு­தப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்­து­விடக் கூடாது. 

ஜனா­தி­ப­தியின் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அத்­த­கைய ஏமாற்றச் சூழலில் தனி­யா­ளா­கிய ஜெனிபன் என்ற அர­சியல் கைதி விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி தனது நல்­லெண்­ணத்­தையும் பெருந்­தன்­மை­யையும் மேலும் விரி­வு­ப­டுத்த வேண்டும். வெறு­மனே விழ­ாக்­களில் பங்­கெ­டுத்துக் கொள்­வ­தென்­பது அரசியல் இலாபத்தை இலக்காகக் கொண்ட செயற்பாடாகவே நோக்கப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றச் சூழலானது நன்மையான காரியங்களுக்கு வழி வகுப்பதாக அமைய வேண்டும். அதனையே மக்களும் விரும்புகின்றார்கள். எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி மக்களை ஏமாற்றிய அரசியல் போக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி இடப்பட வேண்டும். அதுவே நல்லாட்சியின் நம்பிக்கைக்குரிய அரசியல் அடையாளமாகும். 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது மட்டுமல்லாமல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். புதிய ஆட்சியில் மிகவும் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள அரசியலமைப்பு மாற்றம் என்பது ஆட்சியாளர்கள் விரும்புகின்ற மாற்றங்களை மட்டும் கொண்டிராமல், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விடிவைக் கொடுக்கின்ற சரியான மாற்றங்களையும் உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும்.

அரசியலமைப்பில் மாற்றம் செய்வதென்பது ஆட்சியாளர்களின் அரசியல் நோக்கத்தை மட்டும் கொண்டதாக அல்லாமல், அறுபது வருடங்களாகப் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதாகவும், யுத்தம் காரணமாகவும் தப்பான கருத்துணர்வுகளின் மூலம் பிளவுண்டு கிடக்கும் சமூகங்கள் ஒரே நாட்டு மக்கள் என்ற பரந்த எண்ணத்தின் அடிப்படையில் மனதால் இணைந்து வாழத்தக்க வகையிலான புதிய பாதையில் பயணிப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும்.

அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வடபகுதிக்கான பொங்கல் விஜயம் வழி வகுக்க வேண்டும்.

- செல்­வ­ரட்ணம் சிறி­தரன்