Breaking News

நாட்டில் ஊழல், மோசடிகள் குறையவில்லை!

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒருவருடம் கடந்துள்ள போதிலும் நாட்டில் ஊழல், மோசடிகள் குறைந்தபாடில்லையென ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அந்தந்த நாடுகளில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை அடிப்படையாக வைத்து வெளியான அறிக்கையின்மூலம் இது தெரியவந்துள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்காக நடத்தப்பட்ட ஆய்வறிக்கைப் பட்டியலில் இலங்கைக்கு 83ஆவது இடமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.