Breaking News

உரிய நேரத்தில் மஹிந்­தவை கள­மி­றக்கி ஆட்­சியை கைப்­பற்­றுவோம்!

ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்தும் பல­மான அணி­யாக நாம் இருக்­கின்றோம். இப்­போதும் எமது அணியே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சவா­லா­னது. நாம் ஆட்­சியை கைப்­பற்­றினால் எம்­முடன் வந்து ஒட்­டிக்­கொள்ள பலர் மாற்று அணி­யிலும் உள்­ளனர் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மஹிந்த ஆத­ரவு அணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

உரிய நேரத்தில் மஹிந்­தவை கள­மி­றக்கி ஆட்­சியை கைப்­பற்­றுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தலை­மையில் தனி அணி­யினர் கள­மி­றங்க திட்டம் உள்­ளதா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நல்­லாட்சி என்ற பெயரில் இந்த அர­சாங்கம் பய­ணிக்கும் பாதை மிகவும் மோச­மா­னது. நாட்டு மக்­களை ஏமாற்றி நாட்டை பிரிக்கும் முயற்­சி­யையே இந்த அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்க்கும் கட்­சி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம். இன்றும் எமது அணி­யி­னரே பிர­தமர் ரணிலை எதிர்க்கும் பல­மான கட்­சி­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். அதேபோல் இந்த அர­சாங்கம் எம்மை கண்டு அஞ்­சு­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷவை கண்டு ஐக்­கிய தேசியக் கட்சி அஞ்­சு­கின்­றது.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மஹிந்த அணியை பலப்­ப­டுத்­தவே விரும்­பு­கின்றார். ஆரம்­பத்­திலும் மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கவும் ஜன­தி­ப­தியே எமக்கு ஆத­ரவு வழங்­கினார். அதற்­க­மை­யவே கடந்த பொதுத் தேர்­தலில் நாம் அவரை நிய­மித்தோம். அதேபோல் அந்த தேர்­தலில் மக்­களின் பூரண ஆத­ரவும் எமக்கு கிடைத்­தது. எனினும் எமது வெற்­றியை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் பறித்து விட்­டனர்.

இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் நாற்­ப­துக்கும் அதி­க­மான பிர­தி­நி­திகள் எம்­முடன் உள்­ளனர். அதேபோல் கடந்த தேர்­தலில் நாம் 90க்கும் அதி­க­மான ஆச­னங்­களை பெற்றோம். நாம் ஆட்­சியை கைப்­பற்­றினால் எம்­முடன் வந்து ஒட்­டிக்­கொள்ள பலர் மாற்று அணி­யிலும் உள்­ளனர். இப்­போதும் நாம் பல­மான நிலையில் தான் உள்ளோம். அதேபோல் மாற்று அணியைப் பற்­றிய கேள்­விக்கு இப்­போது பதில் கூற­வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை. எனினும் உரிய நேரத்தில் மஹிந்­தவை கள­மி­றக்கி ஆட்­சியை கைப்­பற்­றுவோம். மக்­களின் ஆத­ரவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவும் எமக்கு உள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ரான பல­மான அணி­யினர் நாம் தான். மஹிந்த ராஜபக் ஷவும் இந்த அணியில் தான் உள்­ளனர். எனவே யாரும் அவ­ச­ரப்­பட வேண்டாம். அவரை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­வது என்­பது எமக்கு தெரியும். அவர் மக்­க­ளுடன் மக்­க­ளாக வாழ விரும்­பு­கின்றார். ஆனால் விரைவில் தலை­மைத்­து­வத்தை ஏற்பார். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உள்ள ஒரே சவால் அவர் மட்­டுமே. ரணில் விக்­கிர்­மா­சிங்க வேறு எவ­ருக்கும் சவா­லான ஒருவர் அல்ல. மஹிந்­தாவை மட்­டுமே அவர் சவா­லாக இன்றும் நினைக்கின்றார். இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி பிற்போட தீர்மானித்துள்ளது. அவ்வாறு இல்லாது நாளை தேர்தலை நடத்துவதாக அறிவித்தாலும் அப்போதும் எமது தெளிவான பதிலை முன்வைப்போம் என்றார்.