Breaking News

ஐ.நா பிரதிநிதிக்கு அழைப்பு விடுங்கள் - ஜனாதிபதியிடம் உண்மை மற்றும் நீதி அமைப்பு கோரிக்கை

யுத்­தத்தின் போது பாலியல் வன்­மு­றை­களை தடுக்கும் பிர­க­ட­னத்தில் இலங்கை கையொப்­ப­மிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். ஆனால் யுத்­தத்தின் போது பாலியல் வன்­கொ­டு­மைகள் துன்­பு­றுத்­தல்­களை இல்­லா­தொ­ழிக்க அர்ப்­ப­ணிப்­புடன் இலங்கை அர­சாங்கம் செயற்­ப­ட­வேண்டும் என்று சர்­வ­தேச உண்மை மற்றும் நீதி அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்த வி்டயம் குறித்து தனது அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்ட இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்தின் யுத்­தத்தின் போதான பாலியல் வன்­மு­றைகள் குறித்து ஆராயும் விசேட அறிக்­கை­யாளர் சைனாப் பங்­கு­ராவை இலங்­கைக்கு அழைக்­க­வேண்டும் என்றும் உண்மை மற்றும் நீதி அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இலங்­கையில் யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற பாலியல் வன்­மு­றைகள் தொடர்பில் தண்­டனை வழங்­கப்­ப­டாத நிலை காணப்­ப­டு­கின்­றது என்றும் பாது­காப்பு தரப்­பி­னரின் பாலியல் வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் ஐக்­கிய நாடுகள் சபை அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும் இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்த ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை அலு­வ­லகம் யுத்த காலத்தில் பாது­காப்பு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பாலிய வன்­முறைச் சம்­ப­வங்கள் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளாகும் என்று தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.