Breaking News

அச்சமான அரசியல் சூழலை இலங்கை மக்கள் நிராகரித்துள்ளனர் – நிஷா

அச்சமான அரசியல் சூழலை இலங்கை மக்கள் ஒன்றுபட்டு நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

வொசிங்டனில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து, நிஷா பிஸ்வால் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தார்.இதில், இலங்கையில் முன்னேற்றகரமான நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தலைப்பில், நிஷா பிஸ்வால் உரையாற்றியிருந்தார்.