Breaking News

அதிகாரப் பகிர்வை தவிர்க்க முடியாது!

அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கி­யதால் உலகில் எந்­த­வொரு நாடும் பிரிந்­த­தில்லை. இதற்கு சிறந்த உதா­ரணம் அயல் நாடான இந்­தி­யா­வாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதி­காரப் பர­வ­லாக்கல் உறு­தி­செய்­யப்­படும். இதற்கு மக்கள் கடந்த தேர்­தல்­களில் ஆணை வழங்­கி­னார்கள் என்று அமைச்­சரும் சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ரப் பர­வ­ லாக்கல் பலப்­ப­டுத்­தப்­படும். மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்கள் அதி­க­ரிக்­கப் படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முத­ல­மைச்சர் சம்­மே­ள­னத்தில் தெரி­வித்த கருத்து தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேட்ட போதே,நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர்­கல்வி அமைச்­சரும் சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அமைச்சர் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் அதி­கா­ரத்தை பர­வ­லாக்கி நாட்­டையும் மக்­க­ளையும் ஐக்­கி­யப்­ப­டுத்­தவே மக்கள் ஆணை வழங்­கினர்.இந்த மக்கள் ஆணையை உதா­சீனம் செய்து அரசின் பய­ணத்தை தொட­ர­மு­டி­யாது. மக்கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்­று­வது ஜனா­தி­ப­தி­யி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் பொறுப்­பாகும்.

எனவே ஒற்­றை­யாட்­சிக்கு அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்டு பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். தற்­போது நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ளோம். இதற்­காக பாரா­ளு­மன்­றத்­தையே அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­யுள்ளோம்.

எனவே அதி­கார பர­வ­லாக்கல் தொடர்­பாக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி அதனை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­குவோம். அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கு­வதால் நாடு பிரியும் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

உலகின் பல நாடு­களில் அதி­காரம் பர­வ­லாக்­கப்­பட்­டதால் அந் நாடுகள் பொரு­ளா­தார, சமூக, அர­சியல் ரீதியில் முன்­னேற்­றங்­களை கண்­டுள்­ளன.

இதற்கு சிறந்த உதா­ரணம் எமது அயல் நாடான இந்­தி­யா­வாகும். எனவே நாடு பிரியும் என்­பது வெறும் மாயை­யாகும். இதன்­மூலம் நாட்­டையும் மக்­க­ளையும் ஐக்­கி­யப்­ப­டுத்த முடியும். உற்­பத்­தி­களை அதி­க­ரித்து பொரு­ளா­தார ரீதி­யான உயர்வை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்­தோடு உலகின் மாற்­றங்­க­ளுக்­கேற்ப நாமும் மாற வேண்டும். அதை­வி­டுத்து கிணற்றுத் தவ­ளை­களைப் போன்று பழமை விதத்தில் சிக்­கிக்­கொண்­டி­ருக்கக் கூடாது. இந்த உல­க­ம­ய­மாக்­களில் நாமும் முன்­னோக்கிச் செல்ல வேண்டும்.

சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்ள வேண்டும். நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐ.தே.கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து இன்று தேசிய அரசு ஏற்­ப­டுத்தி முன்­னு­தா­ர­ணத்தை நாட்­டுக்கும் வெளி­நா­டு­க­ளுக்கும் காட்­டி­யுள்ளோம்.

வெளி­நா­டுகள் இதனை வர­வேற்­கின்­றன. அத்தோடு நாட்டு மக்கள் இந்த அரசுக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே மக்கள் ஆணையை மீறி செயற்பட முடியாது.

அதிகாரத்தை பரவலாக்கி நாட்டையும் மக்களையும் ஐக்கியப்படுத்த மக்கள் வழங்கிய ஆணையை உதாசீனப்படுத்த மாட்டோம்.இதனை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்து பலப்படுத்துவோம் என்றார்.