காணாமற்போன உறவுகளின் கண்ணீர் சாட்சியங்கள்
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மீண்டும் தனது விசாரணை அமர்வுகளை நடத்தி இருந்தது.
அதற்கமைய கரவெட்டிப் பிரதேச செயலகம், வேலணைப் பிரதேச செயலகம், சாவகச்சேரி பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் நான்கு நாட்கள் இடம்பெற்ற விசாரணையில் காணாமற்போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்க வலியுறுத்தி கண்ணீரோடு சாட்சியங்களை வழங்கியிருந்தனர் அவை வருமாறு :
அதற்கமைய கரவெட்டிப் பிரதேச செயலகம், வேலணைப் பிரதேச செயலகம், சாவகச்சேரி பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் நான்கு நாட்கள் இடம்பெற்ற விசாரணையில் காணாமற்போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்க வலியுறுத்தி கண்ணீரோடு சாட்சியங்களை வழங்கியிருந்தனர் அவை வருமாறு :
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கணவரை இராணுவமே பிடித்துச் சென்றது
இறுதி யுத்தத்தின்போது படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளகப் பொறுப்பாளர் காந்தி எனும் பெயருடைய தனது கணவரை இராணுவமே பிடித்துச் சென்றது என அவருடைய மனைவி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்திருந்தார்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் காந்தியின் மனைவியான மகேஸ்வரன் பிரபாகரி மேலும் சாட்சியமளித்ததாவது,
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் உள்ளகப் பொறுப்பாளராக இருந்த எனது கணவர் வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது மற்றுமொரு போராளி எனது கணவரை இராணுவத்திடம் காட்டிக்கொடுத்திருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த எனது கணவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர்.
இதன்பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எனது கணவரை சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இராணுவத்தினர் அழைத்து வந்ததை நான் கண்டேன்.
எனவே எனது கணவர் உயிருடன் தான் உள்ளார் என்பது எனக்குத் தெரியும். தயவு செய்து எனது கணவனை மீட்டுத்தாருங்கள் என அவர் கண்ணீரோடு சாட்சியப் பதிவை வழங்கியிருந்தார்.
என்னுடைய மகனையும் மகளையும் இராணுவமே இழுத்துச் சென்றது.
இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது என்னோடு இருந்த எனது மகனையும் மகளையும் பெண் இராணுவ சிப்பாய்களே இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றி சென்றனர். அதன் பின்னர் எனது பிள்ளைகளை எங்கு கொண்டு போனா ர்கள், என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே தயவு செய்து எனது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என கோப் பாய் பிரதேச செயலர் பிரிவில் நடைபெற்ற ஆணைக்குழு முன் தாயொருவர் கதறியழுதார்.
அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,
எனது மகன் பெயர் புவனேந்திரன் மதன் ராஜ். மகள் பெயர் நிசாந்தினி புவனேந்திரன். நாங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து செல்லும்போது பிரிந்து விட்டோம். எனினும் இராணுவ கட்டுப் பாட்டுக்குள் சென்ற பின்னர் மூவரும் ஓமந் தைப் பகுதியில் ஒன்று சேர்ந்தோம்.
இதன்போது 2009 மே மாதம் 19 ஆம் திகதியன்று என்னோடு எனது மகளும் மகனும் பேசிக் கொண்டிருக்கும்போது பெண் இராணுவ சிப்பாய்கள் வந்து பிள்ளைகள் இருவரையும் இழுத்துச் சென்று மகளை பெண்கள் பிரிவிலும் மகனை ஆண்கள் பிரிவிலுமாக பேருந்தில் ஏற்றிச் சென்றனர். அப்பேருந்தில் எனது மகன், மகள் போன்று வேறு பல சிறுவர்களும் இருந்தார்கள்.
அப்போது நான் அவர்களிடம் எனது பிள்ளைகளை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகளை மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கூறிவிட்டு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் எதுவித தகவலும் இல்லை.
காணாமற்போன மகனிடமிருந்து அஞ்சல் மூலம் கடிதம் கிடைத்தது.
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்ற நிலையில் காணாமற்போன எனது மகனிடமிருந்து கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதாக ஆணைக்குழுவிடம் தந்தையொருவர் சாட்சியமளித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசாரணை அமர்வில் ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி தம்பித்துரை என்ற தந்தை மேலும் சாட்சியமளித்ததாவது,
இறுதி யுத்தத்தின்போது புதுமாத்தளன் பகுதியிலிருந்து குடும்பமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றோம். இதன்போது பல திசைகளிலிருந்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் எமது குடும்பம் மூன்று பிரிவாக சிதறிச் சென்றது. இந்நிலையில்என்னுடைய மகனும் தவறவிடப்பட்டு காணாமல்போயிருந்தார்.
எனது மகன் தவிர மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மூன்று- வருடத்திற்கு முன்னர் எனது மகனிடமிருந்து அஞ்சல் ஊடாக கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. அக்கடிதத்தில், வெலிக்கந்தை பொலன்னறுவையிலிருந்து கடிதம் எழுதுவதாகவும் தன்னுடன் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை எவ்வாறாவது மீட்குமாறு கோரி எழுதியிருந்தார். எனவே உயிருடன் இருக்கும் எனது மகனை தயவுசெய்து விரைவில் மீட் டுத் தாருங்கள் என அவர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.
சிவில் காரியாலயத்தில் வைத்து எனது மகன் காணாமற்போயுள்ளார்.
கையெழுத்து வைக்கப்படவேண்டுமென இராணுவத்தால் கொடிகாமம் சிவில் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்ட மகன் காணாமல்போயுள்ளதாகவும் இதன் பின்னணியில் தமது ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் செயற்பட்டுள்ளதாகவும் தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
எழுதுமட்டுவாள் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பரிமளம் எனும் தாய் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி காணாமல்போன கந்தசாமி ஹரிகரன் (வயது 18) என்ற தனது மகன் தொடர்பில் மேலும் சாட்சியமளித்ததாவது,
என்னுடைய மகன் விடுதலைப்புலி அமைப் பைச் சேர்ந்தவர் எனக்கூறி கொடிகாமம் இராணுவ சிவில் காரியாலயத்திற்கு கையெழுத்து இடுமாறு அழைக்கப்பட்டடிருந்தார். இதன்போது அவரை அழைத்துக் கொண்டு நானும் ஆரம்பத்தில் சென்றிருந்தேன்.
பின்னர் என்னை அங்கு வரவேண்டாம் எனவும் மகனை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர். கையெழுத்து இடுவதற்கு மட்டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனியாக எனது மகனை அனுப்பி வைத்திருந்த நிலையில் அவர் அன்றைய தினம் வீட்டுக்குத் திரும்பவில்லை.
பின்னர் என்னை அங்கு வரவேண்டாம் எனவும் மகனை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர். கையெழுத்து இடுவதற்கு மட்டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனியாக எனது மகனை அனுப்பி வைத்திருந்த நிலையில் அவர் அன்றைய தினம் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் அவர் அங்குள்ள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். எனது மகனின் கைதின் பின்னணியில் எமது ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் செயற்பட்டுள்ளமை தெரியவந்தது. எனினும் அவர் தற்போது எமது ஊரில் இல்லை. எங்குசென்றார் என்பதும் தெரியாது. அத்துடன் குறித்த சிவில் காரியாலயத்தில் குமார, நரையன் என இரண்டு இராணுவ அதிகாரிகளையும் எனக்குத் தெரியும். இதேவேளை எனது மகன் சாவகச்சேரி சரசாலைப் பகுதியிலேயே தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளார். எனவே தயவுசெய்து அவரை அங்கிருந்து மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோவிலில் தங்கி நின்ற மகன்களை இராணுவமே பிடித்துச் சென்றது.
மந்துவிலில் அமைந்துள்ள கோவிலில் தங்கியிருந்து வேலைசெய்த தமது மகன்கள் உட்பட 8 பேரை 2006 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி இரவு இராணுவத்தினர் சுற்றிவளைப்பு என்ற பெயரில் பிடித்துச் சென்றனர் என காணாமற்போன மூன்று பேரின் தாய்மார்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.
கொடிகாமம் இராமச்சந்திரன் செல்லம்மா என்ற தாய் சாட்சியமளிக்கையில்,
இராமச்சந்திரன் இராசகுமார் (வயது 24) என்ற எனது மகன் கோவிலில் இரவுவேலைக்காக தங்கி நின்றுள்ளார். இதன்போது அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரணி இராணுவ முகாமிற்கு சென்ற நாம் எமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். எமது பிள்ளைகளை தாங்கள் பிடிக்கவில்லை எனவும் இப்பகுதிக்குள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நாம் பொலிஸிலும் முறைப்பாடு செய்திருந்தோம். அவர்களும் இடையிடையே விசாரணை என எம்மோடு வந்து கலந்துரையாடிவிட்டுச் செல்வார்கள். எனினும் காணாமற்போன எனது மகன் உட்பட எட்டுப்பேர் தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை, மந்துவிலில் அமைந்துள்ள கோவிலில் தங்கியிருந்து வேலைசெய்த காணாமற்போன தன்னுடைய மகனின் பெயர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள் ளது எனவும் கடத்தியவர்கள் தற்போது வரை மகனை உயிருடனேயே வைத்துள்ளனர் என மல்லிகாதேவி என்ற தாய் காணாமற்போன சிவானந்தம் (வயது 24) என்ற மகன் தொடர் பில் சாட்சியமளித்துள்ளார்.
மந்துவில் வடக்கைச் சேர்ந்த கந்தசாமி லோகநாயகி என்ற தாய் காணாமற்போன கந்தசாமி பரிமேலழகர் (வயது 29) என்ற மகன் தொடர்பில் சாட்சியம் அளித்ததாவது,
என்னுடைய மகன் கோவிலில் நின்றிருந்த அன்று இரவுவேளை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதனையடுத்து அதிகாலை எனது மகனைத் தேடி குறித்த கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு எனது மகன் உட்பட எட்டுப்பேரின் கைகளும் வயர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதன்போது அங்குவந்த "பவல்" வாகனத்திற்குள் இராணுவத்தினரால் எமது பிள்ளைகள் தூக்கிப் எறியப்பட்டதையடுத்து வரணியை நோக்கி பவல் வாகனம் சென்றதாக கண்ணீர்மல்க குறித்த தாய் சாட்சியமளித்திருந்தார்.
சடலங்களுக்குள்ளும் எனது மகன் இல்லை.
இறுதி யுத்தத்தின் போது மக்கள் நிறைந்திருந்த பகுதிகளினை இலக்கு வைத்து இராணுவத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கிபிர் குண்டுத் தாக்குதலில் 500 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்நிலையில் என்னோடு ஒன்றாக நின்ற எனது மகன் காணாமற்போயிருந்தார். அவர் எங்கே என தேடியபோதும் காணவில்லை. இந்நிலையில் சிதறிக்கிடந்த சடலங்களையும் தேடிப்பார்த்ததேன் அங்கும் மகன் கிடைக்கவில்லை. எனவே எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதையே நான் ஊகித்துக்கொண்டேன் என தாயொருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் ஜேசுதாஸன் மோட்ஷா இன்பம் என்ற தாயார் மேலும் சாட்சியமளிக்கையில்,
இயுதி யுத்தத்தின் போது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதல், மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து சென்று கொண்டே இருந்தோம்.
இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும்போது வெட்ட வெளிகளுக்குள் தரப்பாள்களை கட்டிவிட்டு தங்கியிருந்தோம்.இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 22 ஆம் திகதி புதுமாத்தளன் பகுதியில் நாங்கள் தரப்பாள் கொட்டிலில் இருந்தபோது இராணுவத்தின் கிபிர் தாக்குதல் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தரப்பாள் கொட்டில்களில் இருந்த நாங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியில் ஓடிச் சென்றோம். நீண்ட நேரமாக தொடர்ந்த குண்டுத்தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது ஏராளமான மக்கள் மத்தியிலும், நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு மத்தியிலும் காணாமற்போன எனது மகனான உசாந்தனை தேடி அலைந்தேன். இங்கு விதைக்கப்பட்டிருந்த பிணங்களுக்குள் எனது மகனை தேடுவதற்குள் அடுத்த கட்ட கிபிர் தாக்குதல் மீண்டும் மக்கள் இருந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
அத்தாக்குதலிலும் பலர் கொல்லப்பட்டார் கள். இறுதியாக மாலை வரைக்கும் கிபிர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அன்றைய தாக்குதலில் உடல்கள் சிதறி உயிரிழந்து கிடந்த ஒவ்வொரு சடலமாக புரட்டிப் பார்த்தேன். அதில் என்னுடைய மகன் இல்லை. எனவே என்னுடைய மகன் பிடித்து செல்லப் பட்டிருக்கலாம் அல்லது ஷெல்தாக்குதலுக் குப் பயந்து எங்காவது சென்றிருக்கலாம் என்ற நிலையில் குண்டுத்தாக்குதலுக்கு மத்தியிலும் 15 நாட்கள்வரை எனது மகனைத் தேடித்திரிந்தேன். எனினும் அவர் மீண்டுவரவில்லை என அவர் சாட்சியமளித்திருந்தார்.
காணாமற்போன மகனின்புகைப்படம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு, புதுமாத்தளனில் இறுதியாக கண்டிருந்த எனது மகனை உள்ளூர் பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படம் வாயிலாகவே கண்டிருந்தேன் என ஆணைக்குழுவின் முன்னிலையில் தாயொருவர் காண்ணீர் மல்க சாட்சியமளித்திருந்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் நடை பெற்ற விசாரணையில் சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான ஸ்ரீஸ்வரி புஸ்பராசா என்ற தாய் மேலும் சாட்சியமளிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வினை அடுத்து வன்னி நோக்கி நாம் குடும்பமாக இடம்பெயர்ந்திருந்தோம். இந்நிலையில் காணாமற்போன புஸ்பராசா அஜிந்தன் (வயது 18) என்ற எனது மகன் மல்லாவி மத்திய கல்லூ ரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்தார்.
இதன்போது 2008 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி விடுதலைப்புலிகள் எனது மகனை பிடித்துச் சென்றிருந்தனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் மீண்டும் எம்மிடம் தப்பித்து வந்திருந்தார். இதனையடுத்து இரண்டாவது தடவையும் விடுதலைப்புலிகளால் எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் தப்பித்து வந்த நிலையில் உறவினர் வீட்டில் சுமார் ஒரு வருடம் அவரை மறைத்து வைத்திருந்தோம். எனினும் மூன்றாம் தடவையாகவும் விடுதலைப்புலிகள் எனது மகனை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களிடமிருந்து மீண்டும் தப்பித்து வந்த எனது மகனை முள்ளியவளை புதுமாத்தளன் பகுதியில் 200-9ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இறுதியாகக் கண்டிருந்தோம்.அதன்போது அவருடன் கதைப் பதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் எமது உறவினர் ஒரு வர், 2009 மே மாதம் புதுமாத்தளன் பகுதியில் எனது மகனை இராணுவம் பிடித்து வைத்திருந்ததை கண்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2013, 2014 இல் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் எனது மகனுடன் பலர் நிலத்தில் இருத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பத்திரிகையின் ஆதாரத்தோடு எனது மகனை மீட்டுத்தருமாறு மனித உரிமை ஆணையகத்திலும் வேறு பல இடங்களிலும் முறையிட்டிருந்தேன். எனினும் இதுவரை எந்தப் பதிலும் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. தயவு செய்து எனது மகனை திருப்பித் தாருங்கள். எனது மகன் உயிருடனேயே உள்ளார் என குறித்த தாயார் சாட்சியமளித்திருந்தார்.
காணாமல் போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன்.
வன்னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டிருந்தேன். அப்போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் என தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் நடைபெற்ற விசாணை ஆணைக்குழுவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் மேலும் சாட்சியமளித்தாவது,
எனது மகள் அனுசியா கிளிநொச்சியில் அரச துறையில் பணிபுரிந்து கொண்டு எனது சகோதரியோடு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு இருக்கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆவனி மாதம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு பதிவு ஒன்று மேற்கொள்வதற்காக நான்சென்றிருந்தேன்.இதன்போது எனது மகளை அங்கு கண்டிருந்தேன். எனினும் எனது மகள் என்னைக் காணவில்லை. அவர் சற்று தூரத்திலேயே நின்றிருந்தார். அப்போது அவர் வெள்ளை நிற உடையனிந்திருந்ததுடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்திருந்தார். இந்நிலையில் எனது மகள் உட்பட சிலரை அங்கு வந்த அதிகாரிகள் வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
இதன்போது அங்கு நின்ற அதிகாரிகளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்லப்படுகிறார்கள் என கேட்டபோது நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்வதாக அந்த அதிகாரி பதில் வழங்கியிருந்தார்.இதன்போது அந்த அதிகாரியிடம் எனது மகளின் பெயர் விபரத்தை கூறி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுபவரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறியிருந்தேன். அதற்கு அந்த அதிகாரி அத்தகைய பெயர் வழியில் ஆட்கள் இல்லை எனத் தெரிவித்தார். அவருடைய கூற்று அவ்வாறாக அமைந்திருந்தாலும் நான் கண்டது எனது மகளைத் தான். அது எனக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.
இதன்போது அங்கு நின்ற அதிகாரிகளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்லப்படுகிறார்கள் என கேட்டபோது நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்வதாக அந்த அதிகாரி பதில் வழங்கியிருந்தார்.இதன்போது அந்த அதிகாரியிடம் எனது மகளின் பெயர் விபரத்தை கூறி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுபவரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறியிருந்தேன். அதற்கு அந்த அதிகாரி அத்தகைய பெயர் வழியில் ஆட்கள் இல்லை எனத் தெரிவித்தார். அவருடைய கூற்று அவ்வாறாக அமைந்திருந்தாலும் நான் கண்டது எனது மகளைத் தான். அது எனக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.
மகனுக்காக மகளை பிடித்துச் சென்றனர்.
மானிப்பாய் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது இரவு வேளை வீட்டிற்கு வந்த மூவர் மகன் எங்கே எனக் கேட்டனர். அவர் வீட்டில் இல்லையெனத் தெரிவித்தபோது எனது மகளை பிடித்துச் சென்றனர் என சுப்பிரமணியம் இளையபிள்ளை என்ற தாயொருவர் சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
எமது சொந்த இடம் சரசாலை வடக்கு ஆகும். 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மானிப்பாயில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். இதன்போது 2008 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 23 ஆம்திகதி இரவுவேளை எமது வீட்டிற்கு வந்த மூவர் எனது மகன் எங்கே எனக் கேட்டிருந்தனர்.
மகன் வெளியே போயுள்ளார் எனத் தெரிவித்திருந்தேன். இதன்போது எனக்கருகில் நின்ற எனது மகளான சுப்பிரமணியம் பிரேமராஜினியை (கடத்தப்படும் போது வயது 22) வலுக்கட்டாயமாக குறித்த மூவரும் பிடித்துச் சென்றனர். இதன்போது எனது மகளை விட்டுவிடுங்கள் என அவர்களிடம் கெஞ்சியபோது அவர்கள் துவக்கைக் காட்டி சத்தம் போடவேண்டாம் என அச்சுறுத்தினர். இவ்வாறு வந்த மூவரும் இராணுவத்தினர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
எனது மகளை அவர்கள் இப்போதும் தடுத்து வைத்துள்ளனர். தயவுசெய்து அவர்களிடமிருந்து மகளை மீட்டுத்தாருங்கள் என அவர் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தார்.
வரணி முகாமில் இராணுவமே பிடித்தது.
வேம்பிராய்ப் பகுதியில் நின்ற எனது கணவரை வரணி முகாமில் நின்ற இராணுவத்தினரே பிடித்துச் சென்றதுடன் அவரை அங்கு ஒரு வருடம் தடுத்து வைத்துள்ளனர் என மகேந்திரம் சோமகலாவதி என்ற பெண் சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
எனது கணவர் தும்புத்தடியினை தயாரிக்கும் வேலையினைச் செய்து வந்தார். அதன் நிமித்தம் தடிகள் வெட்டுவதற்காக வேம்பிராய்ப் பகுதிக்கு சென்றிருந்தார். இதன்போதே இராணுவத்தினர் எனது கணவரை கடந்த 2007 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 ஆம் திகதி பிடித்துச் சென்றுள்ளனர். அவர் பிடித்துச் செல்லப்பட்டதை அப்பகுதியில் நின்றவர்களே என்னிடம் தெரிவித்தனர்.
அத்துடன் அவர் பிடிக்கப்பட்ட இடத்திற்கு முன்னும் பின்னும் இரண்டு இராணுவ சோதனைச் சாவடி முகாம்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இரு சோதனைச் சாவடி முகாம்களின் தலைமைப்பீடமாக கச்சாய் இராணுவ முகாமே இயங்கி வந்தது. இதன் தலைமை அதிகாரியாக ராமநாயக்க செயற்பட்டிருந்தார்.
எனது கணவன் பிடித்துச் செல்லப்படது முதல் இன்றுவரை பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். தொடர்ச்சியாக விசாரணை ஆணைக்குழு எனக்கூறி காலத்தை இழுத்தடிக்காமல் உயிரோடு இருக்கும் எனது கனவனை மீட்டுத் தாருங்கள் என அவர் சாட்சியமளித்தார்.
மகனைத் தேடிச் சென்ற என்னை இராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியால் சென்ற மகனை சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் பிடித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரைத்தேடி சாவகச்சேரி இராணுவமுகாமுக்குச் சென்றபோது பிடிக்கப்பட்ட மகன் பலாலி இராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இங்கு வரவேண்டாம் என அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தடிகொண்டு விரட்டியடித்தார் என அச்சுவேலிப் பகுதியில் வசித்து வரும் சின்னத்துரை கமலா தேவி என்ற தாய் சாட்சியமளித்தார்.
அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,
1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 30 ஆம் திகதி வேலை நிமித்தம் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியூடாக எனது மகனான சின்னத்துரை செல்வநாதன் (வயது 24) சென்றிருந்தார். இதன்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடியில் நின்ற இராணுவத்தினாரால் எனது மகன் பிடித்துச் செல்லப்படுவதாக அங்கு நின்றவர்கள் என்னிடம் வந்து தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சோதனைச் சாவடிக்கான பிரதான முகாமாக சாவகச்சேரியில் அமைந்திருந்த இராணுவ முகாமிற்கு நான் சென்றிருந்தேன். இதன்போது அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் "நீங்கள் செல்வநாதனின் அம்மாவோ" என கேட்டதுடன் "உங்களுடைய மகனை பலாலி இராணுவ முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளோம்" என அவர் தெரிவித்திருந்தார்.
இதன்போது எனது மகன் உங்களுடைய இராணுவ முகாமிலேயே இருக்கின்றார் தயவுசெய்து அவரை என்னுடன் அனுப்பி வைத்துவிடுங்கள் என அந்த இராணுவ அதிகாரியிடம் கூறியபோது அவர் தடியொன்றினை எடுத்து அடிக்க ஓங்கியதுடன், இனிமேல் இப்பகுதிக்குள் வரக்கூடாது என என்னை விரட்டியடித்தார்.
என்னுடைய மகனுடன் பலரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அரசாங்கம் காணாமல்போனார் தொடர்பில் வழங்குகின்ற பிச்சைக் காசு எமக்குத் தேவையில்லை. எனக்கு பிடித்து செல்லப்பட்ட என்னுடைய காணாமல் போன மகன் தான் வேண்டும். அதுவரை அவரை கண்டுபிடிப்பதற்கான போராட்டம் ஓயாது எனத் தெரிவித்தார்.
கச்சாய் இராணுவத்திடமே சகோதரனை ஒப்படைத்தேன்.
கச்சாயிலிருந்த இராணுவ முகாமிற்கு பொறுப்பாகச் செயற்பட்ட இராணுவ அதிகாரி கேணல் சில்வாவிடமே எனது சகோதரனை விசாரணைக்காக ஒப்படைத்திருந்தேன். இந்நிலையில் எனது சகோதரன் தப்பியோடி விட்டதாக அந்த இராணுவ அதிகாரி தெரிவித்ததாக சகோதரர் ஒருவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எனது சகோதரன் பொன்னுத்துரை மகாதேவன் வன்னியில் இருந்துவிட்டு என்னோடு தங்கியிருக்க 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அக்காலப்பகுதியில் புதிதாக வீட்டில் தங்கியிருக்க யார் வந்தாலும் அவர்களை தம்மிடம் வந்து பதியுமாறு இராணுவத்தினர் அறிவித்திருந்தனர்.
இந் நிலையில் எனது சகோதரரை 1996ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 20 ஆம் திகதி கச்சாய் இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். அதன்போது எனது சகோதரை விசாரணை செய்யவேண்டும் எனவும் மறுநாள் என்னை வருமாறும் அந்த இராணுவ முகாம் அதிகாரியான கேணல் சில்வாவும் புலனாய்வு அதிகாரியான மங்கள என்பவரும் என்னிடம் கூறினார்கள்.
நான் அவர்கள் கூறியதற்கமைவாக சகோதரனை அங்கு விட்டு விட்டு மறு நாள் அவரை கூட்டிச் செல்ல இராணுவ முகாமிற்குச் சென்றிருந்தேன். இதன்போது அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் எனது சகோதரன் இரவோடு இரவாக தப்பியோடி விட்டதாக என்னிடம் கூறினார்கள்.
இக் கதை முட்டாள்களுக்கு கூறும் கதையாகும். ஏனெனில் இராணுவ முகாம் என்பது மிகுந்த பாதுகாப்புக்குள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தவகையில் அதிலிருந்து ஒருவர் தப்பியோடுவென்பது சாதாரன விடயமல்ல. இந்நிலையில் எனது சகோதனைத் தேடி பல இடங்கள் அலைந்து திரிந்தும் அவர் இதுவரை கிடைக்கவில்லை.
இக் கதை முட்டாள்களுக்கு கூறும் கதையாகும். ஏனெனில் இராணுவ முகாம் என்பது மிகுந்த பாதுகாப்புக்குள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தவகையில் அதிலிருந்து ஒருவர் தப்பியோடுவென்பது சாதாரன விடயமல்ல. இந்நிலையில் எனது சகோதனைத் தேடி பல இடங்கள் அலைந்து திரிந்தும் அவர் இதுவரை கிடைக்கவில்லை.
இதேவேளை இராணுவ அதிகாரியான சில்வாவை கடந்த 2013ஆம் ஆண்டு பூந்தோட்டம் படை முகாமில் கண்டேன். அவர் அங்கு முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்தார். எனவே எனது சகோதரன் எங்கு உள்ளார் என்பதை குறித்த அதிகாரியை விசாரணை செய்வதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும் என அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முறைப்பாடுகளின் விசாரணைகளை விசேட விசாரணைக்குழுவே மேற்கொள்ளும் மெக்ஸ்வல் பரணகம தெரிவிப்பு.
காணாமல் போனோர் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவிடம் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அடுத்தபடியாக ஜனாதிபதியின் கீழ் செயற்படும் விசேட விசாரணைக்குழுவே விசாரணையை மேற்கொள்ளும் என மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
காணாமல்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூன்று கட்டங்களாக விசாரணைகளை நெறிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் முதலில் மக்களுடைய முறைப்பாடுகளை உள்வாங்கியது. இதன்போது எழுத்து மூலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது. அத்தகைய தரவுகளை அடிப்படையாக வைத்து காணாமல்போனோரின் உறவுகளிடம் வாய்மூலமான பதிவுகளை ஆணைக்குழு இரண்டாம் கட்டமாக கடந்த நான்கு நாட்களாகவும் அதற்கு முன்னரும் பதிந்து கொண்டது.
இவ்வாறு பதியப்பட்ட தரவுகளின் பின்னர் அதனை விசாரணை செய்வதற்காக ஒரு விசேட விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். அது ஜனாதிபதியின் ஆற்றுகையின் கீழேதான் அந்த விசாரணைக்குழு உருவாக்கப்படும். அந்த விசாரணைக்குழுதான் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்.
தற்போது காணாமல்போன உறவுகள் வழங்கும் முறைப்பாடுகள் அனைத்தும் குற்றச்சாட்டுக்களே. இந்த குற்றச்சாட்டுக்களை வைத்து யார் குற்றவாளிகள் என்பதை விசாரணை செய்வதே குறித்த விடேச விசாரணைக்குழுவின் பணியாகும். இத்தகைய விசேட விசாரணைக்குழுவின் முடிவுகள் மீண்டும் எமது ஆணைக்குழுவிடம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் முடிவுகளை நாம் ஜனாதிபதியிடம் கையளிப்போம். அதன்பின்னர் ஜனாதிபதி எத்தகைய தீர்மானத்தை முன்வைப்பார் என்பதை அவரே தீர்மானிப்பார்.
மேலும் எமது ஆணைக்குழு முன் மக்களினால் வழங்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் மூன்று வகையாகவே பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்று இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டு, இரண்டாவது விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு, மூன்றாவது பொதுவான கடத்தல்கள் (பின்னணியில் ஒட்டுக்குழுக்கள்) என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்கைய குற்றச்சாட்டுக்கள் இடத்துக்கிடம் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாக உள்ளன.
காணாமல் போனோர் விடயம் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் வரவேண்டிய அவசியமில்லை. அத்தோடு இலங்கையில் எந்த இனமானலும் சரி எந்த சமூதாயமாக இருந்தாலும் சரி அவர்களுக்கான நீதி வழங்கலில் வெளிநாட்டு நீதிபதிகள் தலையிடுவதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் எமது சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு அவர்களின் உதவி பெறப்படும்.
மேலும் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அவ் அமைச்சு உருவாக்கப்பட்டதும் அதனிடம் எமது சகல அறிக்கைகள், விபரங்கள் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.








