Breaking News

முன்னேற்றம் ஏற்பட்டபோதும் கவலைகள் இன்னும் நீடிக்கின்றன..!!

இலங்கை மனித உரிமை நிலை­மையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்­கிறோம். ஆனால் ஒரு­சில விட­யங்கள் தொடர்­பான கவ­லைகள் இன்னும் இலங்­கையில் தொடர்­கின்­றன என்று பிரிட்­டனின் வரு­டாந்த மனித உரிமை அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட் ­டுள்­ளது.

நேற்று வெளி­யி­டப்­பட்டுள்ள அந்த அறிக்­கை யில் இலங்கை தொடர் பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் வரு­மாறு,

இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர் பில் தொடர்ச்­சி­யாக பிரிட்­டனின் அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இலங்­கையின் மனித உரிமை முன்­னேற்றம் தொடர்பில் பிரிட்டன் அதிக அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமை நிலை­மையில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்­கிறோம். ஆனால் ஒரு­சில விட­யங்கள் தொடர்­பான கவ­லைகள் இன்னும் இலங்­கையில் தொடர்­கின்­றன.

2015 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­னேற்­றங்கள் கவ­னிக்­கத்­தக்­கன. குறிப்­பாக கருத்து சுதந்­திரம், நட­மாடும் சுதந்­திரம், இனக்­க­ல­வர பதற்­ற­மின்மை, ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­பட்­டமை போன்­ற­வற்றை குறிப்­பி­டலாம்.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரனை வழங்­கி­ய­மையும் நல்­லி­ணக்­கத்­துக்கும், பொறுப்­புக்­கூ­ற­லுக்கும் தன்னை அர்ப்­ப­ணித்­த­மையும் வர­வேற்க்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். அந்த விட­யங்­களை ஆராய்­வ­தற்கு அர­சாங்கம் மேற்­கொள்­ள­வி­ருக்­கின்ற முயற்­சிகள் பாராட்­டத்­தக்­கன.

அதே­நேரம் வடக்­கிலும், கிழக்­கிலும் நிலை­மைகள் குறிப்­பிட்­டத்­தக்­க­ளவு மோச­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. மனித உரிமை காப்­பா­ளர்கள் தொடர்ந்தும் சித்­தி­ர­வ­தைக்­குட்­ப­டுதல், தொடர் கண்­கா­ணிப்­புக்கள், சித்­தி­ர­வதை சம்­ப­வங்கள், பாலியல் வன்­மு­றைகள் என்­பவை 2015 ஆம் ஆண்­டிலும் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன.

இதே­வேளை பிரிட்டன் பிர­தமர் டேவிட் கெமரூன் இலங்­கைக்கு 6.6 மில்­லியன் பவுண்­களை அடுத்த மூன்று வரு­ட­கா­லத்­துக்கு உத­வி­யாக வழங்­கி­யுள்ளார். நல்­லி­ணக்­கத்­தையும், மனித உரி­மை­க­ளையும் பலப்­ப­டுத்­தவே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் பிரிட்டனின் அனுபவங்களை பகிர்வதுடன் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் பிரிட்டன் தயாராக உள்ளது.