Breaking News

விக்கினேஸ்வரன் தமிழர்களுக்கான தீர்வை குழப்புகிறார் - டிலான்

அனைத்து தரப்­பி­னரும் நம்­பிக்­கை­யு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­பட்டால் இவ்­வ­ருட இறு­திக்குள் அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­ளலாம் என்று எதி­ர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னைப்­போன்று நாங்­களும் நம்­பு­கின்றோம். அதற்­கான எப்­போ­து­மில்­லாத சந்­தர்ப்பம் தற்­போது கிடைத்­துள்­ளது.

அதனை தவ­ற­வி­டக்­கூ­டாது என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார்.

ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைப் பெறும் முயற்­சிக்கு வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் முட்­டுக்­கட்­டை­யாக இருப்பார் என்று தோன்­று­கின்­றது. சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களின் அடிப்­ப­டையில் இரண்டு மாநி­லங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்ற வடக்கு முத­ல­மைச்­சரின் திட்­ட­வ­ரை­பா­னது தெற்கில் உள்ள இன­வா­தி­களை போஷிப்­ப­தாக அமைந்­துள்­ளது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் கடந்த காலங்­க­ளில்­போன்று அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மை­பபும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு வெளியில் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்குள் வேண்­டு­மானால் பேச்­சுக்­களை நடத்­தலாம் என்றும் அவர் கூறினார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சிகள் அதில் தேசிய பிர­ச­சி­னைக்­கான தீர்வை உள்­ள­டக்­குதல் தொடர்­பாக விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்ட விட­யங்­களை தெரி­வித்தார். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து மேலும் விப­ரிக்­கையில்

அனைத்துத் தர­ப­பி­னரும் நம்­பிக்­கை­யுடன் செயற்­பட்டால் இவ்­வ­ருட இறு­திக்குள் அர­சியல் தீர்வைப் பெறலாம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­மந்தன் கூறி­யி­ருக்­கின்றார். அதா­வது வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலை­யி­லேயே எதிர்க்­கட்சித் தலைவர் இவ்­வாறு நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

அவரின் நம்­பிக்கை நியா­ய­மா­ன­துதான். அது­மட்­டு­மன்றி அவ­ரைப்­போன்ற நம்­பிக்­கையை நாங்­களும் வைத்­தி­ருக்­கின்றோம். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் வேலைத்­திட்­டங்­களும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. எமது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­யீட்டில் அதில் பல திருத்­தங்­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

அந்­த­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மை­பபில் அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும் என்ற இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இது எமக்கு கிடைத்த பாரிய வெற்­றி­யாகும். அந்­த­வ­கையில் அதற்­கான முயற்­சிகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. அப்­படி பார்க்­கும்­போது எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நம்­பிக்கை வெற்­றி­பெறும் சாத்­தியம் உள்­ளது.

இது இவ்­வாறு இருக்க வடக்கு மாகாண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் ஒரு காலத்தில் பதுளை நீதி­மன்­றத்தில் பணி­யாற்­றிவர். ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக நான் அவ­ரி­டம்தான் முதலில் எனது தொழிலை ஆரம்­பித்தேன். தனது வாக­னத்தை தானே செலுத்­தி­வந்த நீதி­ப­தி­யாக விக்­கி­னேஸ்­வரன் அக்­கா­லத்தில் இருந்தார்.

அவ்­வா­றான ஒருவர் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக வந்­த­மை­மை­யைிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். ஆனால் தற்­போது அவர் மேற்­கொண்­டு­வரும் செயற்­பா­டுகள் தொடர்பில் நான் கவ­லை­ய­டை­கின்றேன்.

வட மாகாண சபையின் இந்த யோச­னை­யா­னது எமது சவால்­க­ளுக்கு மத்­தியில் தீர்­வைக்­காண்­ப­தற்­கான எமது முயற்­சிக்கு பாரிய தடை­யாக அமைந்­துள்­ளது. சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களின் அடிப்­ப­டையில் இரண்டு மாநி­லங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்ற வடக்கு முத­ல­மைச்­சரின் திட்­ட­வ­ரை­பா­னது தற்­போ­தைய நிலை­மையில் அவ­சி­ய­மற்­ற­தாக உள்­ளது. இந்த வரைபு தெற்கில் உள்ள இன­வா­தி­களை போஷிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

அதா­வது நாங்கள் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முயற்­சித்­து­வ­ரு­கின்றோம். ஆனால் அந்த முயற்­சி­களை சீர்­கு­லைக்கும் நோக்­கி­லேயே வடக்கு முதல்­வரின் திட்­ட­வ­ரைபு அமைந்­துள்­ளது. இது தொடர்பில் நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம்.

இந்த அர­சியல் தீர்­வுத்­திட்ட விவ­கா­ர­மா­னது மிகவும் உணர்­வு­பூர்­வ­மா­ன­தாகும். எனவே இதில் அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது. அவ­ச­ரப்­பட்டு குழப்­பி­விட்டால் எதிர்­பார்ப்­புக்­களை கைவி­ட­வேண்­டி­யேற்­படும். குறிப்­பாக வடக்கு மாகாண சபையின் இந்த செயற்­பா­டா­னது தெற்கில் சந்­தர்ப்பம் பார்த்து காத்­தி­ருக்கும் இன­வா­தி­களை போஷிப்­ப­தாக காணப்­ப­டு­கின்­றது. தெற்கு இன­வா­தி­க­ளுக்கு தீனி­போடும் வகை­யி­லேயே வடக்கு முத­ல­மைச்­சரின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அது மட்­டு­மன்றி எமது நேர்­மை­யான அர்ப்­ப­ணிப்­பு­மிக்க முயற்­சி­க­ளுக்கு தடை­யேற்­ப­டுத்­து­வ­தாக இவர்­களின் செயற்­பா­டுகள் உள்­ளன. எதிர்க்­கட்சித் தலைவர் சம்­மந்தன் மற்றும் என்­னைப்­போன்­ற­வர்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு உலை வைப்­ப­தா­கவே வடக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் உள்­ளன.

இது இவ்­வாறு இருக்க புதிய அர­சி­ய­ல­மைப்­புக்குள் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டத்தை உள்­ள­டக்க தீர்­மா­னிக்­க­ப­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான பிர­தான குழுவும் உப குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் கடந்த காலங்­க­ளைப்­போன்று அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு வெளியில் அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தனித்து இரு­த­ரப்பு பேச்­சுக்­களை நடத்­த­வேண்­டிய அவசியம் இல்லை என்று நான் கருதுகின்றேன்.

அனைத்து பேச்சுவார்த்தைகளையும் அரசியலமைப்பு பேரவைக்குள்ளேயே நடத்த முடியும். அதாவது அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியலமப்பு பேரவைக்கு உட்பட்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். ஆனால் பாராளுமன்றத்துக்கு வெளியில் அரசாங்கமும் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவேண்டியதில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

அரசியலமைபபு பேரவை தொடர்பான பிரதான குழு மற்றும் உப குழுக்களில் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதித்துவங்கள் உள்ளன. எனவே அனைத்து யோசனைகளும் உள்ளடங்கும் வகையில் பேச்சுக்களை நடத்த முடியும் என்றார்.