Breaking News

நிலைப்பாடு ஒன்றானால் வெற்றி எமது பக்கம்! -சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எடுக்கும் அர­சியல் நிலைப்­பாடும் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்கும் அர­சியல் நிலைப்­பாடும் ஒன்­றாக இருக்­கு­மானால் அது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்தை வெற்­றி­ய­டையச் செய் யும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டக்­க­ளப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்­டலில் நேற்று நடத்­திய அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தொடர் ­பான செய­ல­மர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற் கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்­து­ரை­யாற்­று­கையில்

அதி­கா­ரங்கள் அர்த்­த­முள்ள விதத்­திலே பகிர்ந்­த­ளிக்­கப்­படல் வேண்டும் என்­கின்ற அடிப்­படை விட­யத்தில் நாங்கள் ஒன்­றாக நிற்­கின்றோம். உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தில் கூட நாங்கள் எடுக்­க­வுள்ள நிலைப்­பாடு ஒன்­றா­கவே இருக்கும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது.

நாங்கள் எடுக்கும் நிலைப்­பாடும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்கும் நிலைப்­பாடும் ஒன்­றாக இருந்­தால்தான் தமிழ் சமூ­கமும் வெற்றி கொள்ளும். முஸ்லிம் சமூ­கமும் வெற்­றி­கொள்ளும்.இது எவ்­வ­ளவு பெரிய சவா­லக இருந்­தாலும் நாங்கள் சேர்ந்து மேற் கொள்ள வேண்டும். விஷே­ட­மாக 1983 ஆம் ஆண்டு இன வன்­மு­றைக்குப் பின்னர் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 6 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்ட வேளையில் தமிழ் பிர­தி­நி­திகள் தமது பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவ ஆச­னத்தை இழந்து பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­போது பெரி­ய­தொரு இடை­வெளி ஏற்­ப­பட்­டது.

1987 ஆம் ஆண்டு 13ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் கார­ண­மாக 1989 ஆம் ஆண்­டி­லி­ருந்து தமிழ் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்­திற்கு வரக்­கூ­டி­ய­தாக இருந்­தாலும் 13 ஆம் திருத்­ததை முழு­மை­யாக ஏற்றுக் கொள்­ளாத கார­ணத்­தி­னாலும் வேறு­பல கார­ணங்­க­ளி­னாலும் அதற்கு பின்­னரும் தமிழ் மக்­களின் உண்­மை­யான பிர­தி­நி­தி­க­ளுக்கு மாற்று அர­சி­யலில் முழு­மை­யாக பங்­கேற்­கின்ற சந்­தர்ப்பம் இருந்­தி­ருக்­க­வில்லை.

அது இப்­போ­துதான் மீண்டும் உத­ய­மா­கின்­றது. இந்த இடைப்­பட்ட காலத்தில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆற்­றிய பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மான பங்­க­ளிப்பு எனக் கூற­மு­டியும்.

எங்­களால் பங்கு பற்ற முடி­யாமல் இருந்த ஒரு கால கட்­டத்தில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அர­சி­ய­ல­மைப்பு சம்­பந்­த­மாக மட்­டு­மல்ல இந்த நாட்டில் எண்­ணிக்­கையில் சிறு­பான்­மை­யாக இருக்­கின்ற மக்­களின் நன்மை கருதி தேசிய மட்­டத்­திலே நிலைப்­பா­டு­களை எடுத்­துக்­கொண்­டன. அந்த நிலைப்­பா­டுகள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு மட்­டு­மல்ல விஷே­ட­மாக தமிழ் மக்­க­ளுக்கும் முழுக்க முழுக்க பிர­யோ­ச­ன­முள்­ள­தா­கவும் தேவைப்­பட்ட ஒன்­றா­கவும் இருந்­தி­ருக்­கின்­றன.

எங்­க­ளு­டைய இய­லா­மை­யாக இருந்த காலத்­திலே எங்­க­ளுக்கு அந்த இடை­வெ­ளியை கைகொ­டுத்து நிரப்­பிய அர­சியல் நண்­ப­ராக சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரசை காண்­கின்றோம்.

1988 ஆம் ஆண்­டி­லி­ருந்து அனைத்து நிலைப்­பா­டு­க­ளிலும் ஒரு கொள்­கைப்­பற்­றோடு விட்­டுக்­கொ­டுக்­காமல் இந்த நாட்­டி­லுள்ள அனைத்து சிறு­பான்மை மக்­க­ளு­டைய நண்­மைக்­காக பன்­மைத்­து­வத்தை பேணு­வ­தற்­காக அரச அதி­கா­ரங்கள் எந்­த­ளவு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என்ற நிலை­யான கொள்­கை­யோடு சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பய­ணித்­தி­ருக்­கின்­றது.

மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் 13வது திருத்­தத்தில் இருக்­கின்ற அதி­கா­ரங்­களில் நான்கு அதி­கா­ரங்­களை எடுப்­ப­தற்கு அன்­றைய அர­சாங்கம் முயற்சித்த போது அந்த அரசாங்கத்தின் பங்காளியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்த போதும் அது நடைபெறாமல் தடுத்ததில் காங்கிரஸ் தலைவர் தலையாய கடமையாற்றியிருந்தார் அதையும் நாம் மறக்க முடியாது.

ஆகையினாலே தொடாச்சியாக இந்தக்கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் சிறப்பாக சிறுபான்மை சமூகங்களின் அரசியல் நலனுக்காக பணியாற்றியுள்ளது என்றார்.