தமிழ் பேசும் மக்களுக்கு தனி ஆட்சி: வடமாகாண சபையில் தீர்மானம்
தமிழ் பேசும் மக்களுக்கு தனி ஆட்சி கோரி வடமாகாண சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்திருந்தது.
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான குறித்த யோசனை வடமாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி ஆட்சி முறையொன்றை உருவாக்கும் யோசனையே குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது இதேவேளை குறித்த தீர்மானம் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கபடவுள்ளது.








