வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி - றிசாத் பதியுதீன் எதிர்ப்பு
வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.
வவுனியா – நெலுங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே றிசாத் பதியுதீன் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்
இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இந்த யோசனைக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








