Breaking News

மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கிறார் சாந்தி


தமிழர் தாயகப் பகுதிகளில் சூட்சுமமான முறையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற நில அளவீடுகள் நிறுத்தப்படாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டங்கள் கிளர்ந்தெழும்பும் என்ற எச்சரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த எச்சரிக்கையை இன்று வியாழக்கிழமை விடுத்தார்.

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றை அனுமதியின்றி அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் சென்றபோது பிரதேச மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

யுத்தத்தினால் அனைத்துவித சொத்துக்களையும் இழந்த மக்களுக்கு தற்போது இருப்பது தங்களது பௌதீக சொத்துக்களே என்று குறிப்பிட்ட அவர், அவற்றையும் பறித்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் களமிறங்கியிருப்பது அனுமதிக்க முடியாத செயல் என்றும் அவர் கூறினார்.