Breaking News

மஹிந்தவை கொலை செய்ய சதி..!!



முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ஒருதடவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என அமைச்சர் சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,இது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களை தாக்கிய குற்றச்சாட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் காமினி லொக்குகே மற்றும் கேஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பந்துல குணவர்த்தன மற்றும் ஜீ எல் பீரிஸ் ஆகியோர் 2001ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இருந்தார்கள்.

இந்தநிலையில் உதய கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. எனினும் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச, இந்தநபர்களை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.