Breaking News

ராஜீவ் கொலை வழக்கு 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை



பேர­றி­வாளன் உள்­ளிட்ட 7 பேர் விடு­த­லைக்கு எதி­ரான வழக்கை 3 நீதி­ப­திகள் கொண்ட அமர்வு விசா­ரணை செய்யும் என்று உச்­ச­நீ­தி­மன்றம் அறி­வித்­துள்­ளது.

முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ரவிச்­சந்­திரன், ஜெயக்­குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடு­தலை செய்­யப்­போ­வ­தாக தமி­ழக அரசு அறி­வித்­தது.

இந்த முடிவை எதிர்த்து அப்­போது ஆட்­சியில் இருந்த காங்­கிரஸ் கூட்­டணி அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்­தது. அந்த மனுவை விசா­ர­ணைக்கு ஏற்றுக் கொண்ட உச்­ச­நீ­தி­மன்றம் 7 பேரையும் விடு­தலை செய்ய இடைக்­கால தடை விதித்து உத்­த­ர­விட்­டது.

பின்னர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி உச்­ச­நீ­தி­மன்­றத்தின் அப்­போ­தைய தலைமை நீதி­பதி பி.சதா­சிவம் தலை­மை­யி­லான அமர்வு, இந்த வழக்கில் 5 நீதி­ப­திகள் அடங்­கிய அர­சியல் சாசன அமர்வு இறுதி முடிவு செய்யும் என்று தீர்ப்பு அளித்தார்.

இதைத்­தொ­டர்ந்து இந்த வழக்கை விசா­ரிக்க தலைமை நீதி­பதி எச்.எல்.தத்து தலை­மையில் அர­சியல் அமர்வு அமைக்­கப்­பட்­டது.

எச்.எல்.தத்து தலை­மை­யி­லான நீதி­ப­திகள் அமர்வு, 7 பேர் விடு­த­லையை எதிர்த்து மத்­திய அரசு தாக்கல் செய்த மேன்­மு­றை­யீடு மீதான விசா­ர­ணையை 3 நீதி­ப­திகள் கொண்ட அமர்வு தனி­யாக விசா­ரிக்கும் என்றும் தெரி­வித்­தது.

அதன்­படி 3 நீதி­ப­திகள் கொண்ட அமர்வு வாரத்தில் திங்­கட்­கி­ழமை மற்றும் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் இந்த வழக்கை விசா­ரிக்கும் என்று உச்­ச­நீ­தி­மன்றம் நேற்­று­முன்­தினம் அறிவித்தது.

எனினும் யாருடைய தலைமையிலான அமர்வு என்பதும், எப்போது முதல் விசாரணை தொடங்கும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.