மாகாணசபையின் பதவி மாற்ற விவகாரம் - முதல்வரை சாடி தப்பிக்கொண்டார் சம்பந்தன்
வட மாகாண சபையின் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தபோது,
மௌனம்காத்த அவர், ஒரு சமயத்தில், தற்பொழுது இருக்கும் வட மாகாணசபையின் பதவிகளை முதலமைச்சர் விக்கினேஸ்வரன்தான் நியமித்தார் என்ற தொனியில் பதிலளித்து தப்பிக்கொண்டார்.








