Breaking News

சிவகரன் விடுதலை..!!

பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான எஸ்.சிவகரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் வௌிநாட்டு அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், கடந்த சில தினங்களாக வடக்கு பிரதேசத்தில் சிலர் கைது செய்யப்பட்டதன் பிரதான காரணம்,வௌிநாட்டு அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தமைகாகவே என பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.