Breaking News

மஹிந்தவைப் பழிவாங்கவே எனது பதவி நீக்கம்- கீதா



மஹிந்த ராஜபக்ஷவைப் பழிவாங்குவதற்காகவே எனது எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டது. என்னைப் பழிவாங்குவதற்கு அல்ல என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

என்னுடைய தொகுதி அமைப்பாளர் பதவியைப் பறித்து, மஹிந்த ராஜபக்ஷவுக்க நான் வழங்கும் ஆதரவைத் தடுத்து நிறுத்த முடியாது. அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டாலும் எனது மக்கள் என்னுடனே இருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.