தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வுகள் பருத்தித்துறையில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து கூட்டாக நடாத்தும் தொழிலாளர் தின நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது.
பருத்தித்துறை சிவன்கோவில் திருமண மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இதில் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரை கண்டறிதல் ஆகியவற்றை வலியுறுத்தியும், தமிழ்த் தொழிலாளர்கள், தமிழ் விவசாயிகள், தமிழ் மீனவர்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடல், காணி அபகரிப்பை தடுத்தல், மீள் குடியேற்றத்தை வலியுறுத்துதல், இராணுவ மயமாக்கலை தடுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளை நிறுத்தல், பயங்காரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தல் என்பன முக்கிய விடயங்களாக கொள்ளப்படவுள்ளன.