Breaking News

வட மாகாண சபையின் தீர்வு திட்டம் சம்பந்தனிடம் கையளிப்பு



வடமாகாண சபையினால் உருவாக்கப்படடுள்ள அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் இன்று(சனிக்கிழமை) தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் வடமாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் இடம்பெறும் வகையில் வடமாகாண சபையினால் 19 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவானது தமிழ் மக்களின் வரலாற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகளை தயாரித்த நிலையில் கடந்த 22ம் திகதி வட மாகாண சபையிலும் அது ஏக மனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த தீர்வு திட்ட முன்மொழிவுகள் நேற்று முந்தினம்( வியாழக்கிழமை) அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.