சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு முடிவுகள் வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் அதன் வாக்கு பதிவுக்கான சதவீத முடிவுகள் நேற்று வெளியாகின.
பல தரப்பட்ட முடிவுகள் வந்த நிலையில் தேர்தல் ஆணையர் ராஜேஸ் லக்கானி உறுதியான தகவல்களை பத்திரிக்கைக்கு வெளியிட்டார்.
மேலும் ஆட்சியை பிடிக்கும் கட்சி மற்றும் தலைவர் யார் என சில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் பெரும்பான்மை முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு அதிமுக திமுக மற்றவை












