வடக்கின் சமஷ்டி தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை!
வடக்கு மாகாணத்தில் சமஷ்டி தீர்வினை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இலங்கை ஒற்றையாட்சி முறைமையை கொண்ட நாடாகும். ஆகையால் மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களினால் எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்க முடியாது. மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வடக்கு மாகாணம் சமஷ்டி கோரியதற்காக அரசாங்கம் அதனை வழங்குவதற்கு தயாரில்லை. இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் நிச்சயமாக தீர்வு காண முடி யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டை நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாணத்தில் சமஷ்டி தீர்வினை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இலங்கை ஒற்றையாட்சி முறைமையை கொண்ட நாடாகும். ஆகையால் மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களினால் எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்க முடியாது. மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது.
எவ்வாறாயினும் பொது எதிரணியினர் நாட்டு மக்களை திசை திருப்பும் வகையில் தொடர்ந்தும் செயற்படுகின்றனர். வடக்கு மாகாணம் சமஷ்டி கோரியதற்காக அதனை வழங்குவதற்கு நாம் தயாரில்லை. நாட்டுக்கு பாதகமான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க மாட்டோம். இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் நிச்சயமாக தீர்வு காணமுடியும். அனைத்து இனத்தவர்களின் புரிந்துணர்வுடன் தீர்வினை காண்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம் என்றார்.








