Breaking News

சீனத் தூதுவரைச் சந்தித்தார் சம்பந்தன்

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு கடந்த மாதம் 25ஆம் நாள் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாகச் செயற்பட்டு வந்துள்ள சீன அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புகளை இதுவரை காலமும் தவிர்த்தே வந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.