Breaking News

வடக்கு பொருளாதார மத்திய நிலைய பிரச்சினைக்குத் தீர்வு

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. 

இதன்படி, வவுனியா மற்றும் ஓமந்தை ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் பொருளதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அந்தப் பிரச்சினைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதன்படி வவுனியா மற்றும் ஓமந்தை ஆகிய இரண்டு இடங்களிலும் இதனை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.