Breaking News

பாதை யாத்திரை இன்று கெடம்பையில் இருந்து ஆரம்பம்



மகிந்த அணியினரால் நடத்தப்படவுள்ள பாதை யாத்திரை இன்று கெடம்பையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக கண்டி நகரில் இந்த பேரணி ஆரம்பிக்கப்படவிருந்த போதும் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. இதன்படி கண்டி நகர எல்லைக்கு வெளியில் இருந்து இதனை ஆரம்பிக்கவிருப்பதாக மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர. 

இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை விரிவாக்கல் வேலைத்திட்டமும் கண்டியில் நடைபெறவுள்ளது. இதனையும் பிற்பகல் 2மணிக்கு பின்னர் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது