பங்களாதேஷில் மீண்டும் குண்டு வெடிப்பு
பங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும் இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை இவ்வாறு குண்டு வெடித்துள்ளது.
மேலும் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.








