Breaking News

தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமையும் என்கிறார் மாவை

வடக்கு பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை வவு­னியா மாவட்­டத்தின் தாண்­டிக்­கு­ளத்­திலா? அல்­லது ஓமந்­தை­யிலா? அமைப்­பது என்­பது தொடர்பில் எழுந்­தி­ருக்கும் சர்ச்சை தமிழ் மக்கள் மத்­தியில் மிகுந்த விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சுமார் 200 கோடி ரூபா செலவில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்கும் இத்­திட்டம் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­திற்குள் ஆரம்­பிக்­கப்­ப­டா­விட்டால் அந்­நிதி திரும்பிச் செல்லும் அபாயம் தோன்­றி­யுள்­ளது.

இதனைக் கருத்­திற்­கொண்டு தமிழ் தலை­மைத்­து­வங்கள் தமக்­கி­டை­யே­யான கருத்து முரண்­பா­டு­களைத்தவிர்த்து சாத்­தி­ய­மான அளவு விரை­வாக இத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

மேலும், நீண்ட காலத்­துக்குப் பின்னர் வட பகு­திக்கு 200 கோடி ரூபா செலவில் அமை­ய­வி­ருக்கும் பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை உரிய முறையில் முன்­னெ­டுக்­காமல் தமிழ்த் தலை­மைத்­து­வங்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்­டுள்ள ஏட்­டிக்கு போட்­டி­யான செயற்­பா­டுகள் தமிழ் மக்கள் மத்­தியில் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

இதே­வேளை, 2010 ஆம் ஆண்டு வவு­னியா மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்­டத்தில் வட மாகா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை வவு­னி­யாவில் அமைக்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இத­ன­டி­பப்­டையில் ஓமந்தை பகு­தியில் சோலைக்­காடு என்ற இடத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் இதற்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன் பின்னர் ஓமந்தை பகு­தி­யி­லேயே ‘மாணிக்­க­வ­ளவு’ என்ற இடத்தில் 13 ஏக்கர் நிலம் பார்க்­கப்­பட்ட நிலை­யிலும் ‘சோலைக்­காடு’ என்ற இடத்தில் ஒதுக்­கப்­பட்ட 20 ஏக்கர் நிலமே இறு­தி­யாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

அந்த இடத்­திற்கு ஏ- 9 வீதியில் இருந்து மூன்று வழி­களால் செல்ல முடியும் என்­ப­த­னாலும் முன்­ன­தா­கவே உயர்­கல்வி நிறு­வனம் மற்றும் சர்­வ­தேச விளை­யாட்டு மைதானம் ஆகி­யன இந்த பகு­தியில் அமைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மை­யி­னாலும் இந்­நி­லத்தை வன­வள பாது­காப்பு திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து இல­கு­வாகப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்னும் அடிப்­ப­டை­யிலும் இந்த இடம் இறு­தி­யாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை வட மாகாண காணி ஆணை­யாளர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், மாகாண காணி ஆணை­யாளர் மற்றும் முத­ல­மைச்­சரின் செய­லாளர் ஆகியோர் இணைந்து சென்று பார்­வை­யிட்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, வட மாகா­ணத்­துக்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை வவு­னியா மாவட்­டத்தில் தாண்­டி­கு­ளத்­திலா? அல்­லது ஓமந்­தை­யிலா? அமைப்­பது என்­பது தொடர்பில் பெரும் சர்­ச­சையை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இதற்­கென ஒதுக்­கப்­படும் 200 கோடி ரூபாவை எக்­கா­ரணம் கொண்டும் திருப்பி அனுப்­பி­விட முடி­யாது. 

எனவே பொருத்­த­மான காணி ஓமந்­தை­யிலோ அல்­லது தாண்­டிக்­கு­ளத்­திலோ எங்கு கிடைக்­குமோ அங்கு பொரு­ளா­தார மையத்தை அமைக்­கலாம். இது குறித்து எமக்­கி­டையே ஓர் இணக்­க­மான கருத்­தொ­ரு­மைப்­பாடு காணப்­பட்­டுள்­ளது. இரு தினங்­களில் இது தொடர்­பான முடிவு எடுக்­கப்­படும் என தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார்.

வடக்கு பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமையும் இடத்தை நேர­டி­யாக சென்று பார்க்கும் வகையில் நேற்­றைய தினம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா, ஓமந்தை மற்றும் தாண்­டிக்­குளம் பகு­தி­க­ளுக்கு சென்று வந்தார். இது தொடர்பில் அவ­ரிடம் வின­விய போது அவர் இவ்­வாறு கூறனார். 

அவர் மேலும் கூறு­கையில்,

வட­மா­கா­ணத்­துக்­கான பொரு­ளா­தார மையத்தை ஏ-9 வீதிக்கு அணித்­தாக மக்கள் ஒன்று கூடும் பிர­தே­சத்தில் அமைக்க வேண்டும் என்­பதே நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் விருப்­ப­மாகும். இதற்­கான காணியை தெரிவு செய்யும் பட்­சத்தில் அவர்கள் அதனை பரி­சீ­லித்து மேற்­படி பொரு­ளா­தார மையத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பார்கள். 

இது தொடர்பில் நாம் கருத்து முரண்­பாடு கொள்­ள­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஓமந்­தையில் காணி இல்­லாத பட்­சத்தில் தாண்­டிக்­கு­ளத்தில் அமைக்­கலாம். எக்­கா­ரணம் கொண்டும் எமது பிர­தே­சத்­துக்­கான வர்த்­தக மேம்­பாட்டை ஊக்­கு­விக்கும் இத்­த­கைய திட்­டத்தை நாம் இழந்­து­விட முடி­யாது. இது குறித்து வடக்கு முத­ல­மைச்­ச­ருடன் நாளை (இன்று) பேச­வுள்ளேன்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஏற்­பட்ட சிறிய முரண்­பா­டுகள் மிகவும் கவ­லை­ய­ளிக்கும் வகையில் அமைந்­து­விட்­டன. மக்­களின் அபி­வி­ருத்தி தொடர்பில் நாம் ஒரு­மு­க­மான முடி­வு­களை மேற்­கொள்­வது அவ­சி­ய­மாகும். அந்­த­வ­கையில் இவ்­வி­கா­ரத்தை பெரி­து­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. குறித்த இவ்­வி­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு காணப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனை விட்டு வீண் முரண்­பா­டுகள் உரு­வா­கு­மானால் அது ஒட்­டு­மொத்­த­மாக எமது மக்­க­ளையே பாதிப்­ப­தாக இருக்கும் என்று தெரி­வித்தார்.

வட மாகா­ணத்­துக்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை மாவட்­டத்தின் தாண்­டிக்­கு­ளத்­திலா? ஓமந்­தை­யிலா? அமைப்­பது என்­பது தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வடக்கு மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­க­ளி­டையே கருத்து வேறு­பா­டுகள் ஏற்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனின் கொழும்பு இல்­லத்தில் நடந்த விசேட கலந்­து­ரை­யா­டலில் தமிழ் கூட்­ட­மைப்பின் வடக்கு மாகாண எம்.பிக்கள், வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்டு தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர். 

இதன்­போது தாண்­டிக்­குள தரப்பும் ஓமந்தைத் தரப்பும் விட்­டுக்­கொ­டுக்­காத நிலையில் நின்­றதால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கு மாகாண எம்.பிக்­க­ளி­டமும் கருத்து கணிப்­பொன்றை நடத்­து­வ­தென்று இரா. சம்­பந்தன் யோச­னை­யொன்றை முன்­வைத்தார். இதற்­க­மைய கூட்டம் நிறை­வுற்­றது.

இந்­நி­லையில், குறித்த இவ்­வி­கா­ரத்­துக்கு சுமு­க­மா­னதோர் தீர்வை தமிழ்த் தலை­மைத்­து­வங்கள் காண­மு­டி­யா­தி­ருப்­ப­தாக கடு­மை­யான விமர்­ச­னங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் எழுந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது இந்­நி­லை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா நேற்­றைய தினம் குறித்த பகு­தி­க­ளுக்கு நேரடி விஜயம் செய்­தி­ருந்தார்.

இதே­வேளை, இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்றம் தொடர்­பான விசா­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் பிர­சு­ர­மா­கி­யுள்­ளன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன? என அவ­ரிடம் வின­வி­ய­போது,

மாவை சேனா­தி­ராஜா எம்.பி பதி­ல­ளிக்­கையில்,

நாங்கள் மீண்டும் மீண்டும் உறு­தி­யுடன் கூறிக்­கொண்­டி­ருப்­பது சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் கூடிய விசா­ர­ணை­யொன்­றையே ஆகும். ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கைத் தரப்பின் உடன்­பாட்­டு­ட­னேயே இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. 

அது மாத்­தி­ர­மன்றி ஐ.நா.வாய்­மொழி மூல பிரே­ர­ணை­யிலும் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசேன் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார். எனவே இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டி­யது அதன் கடப்­பா­டாகும்.  எம்மைப் பொறுத்­த­மட்டில் எமது நிலைப்­பாட்டில் நாம் உறு­தி­யா­கவே இருக்­கின்றோம் என்றார்.

இதே­வேளை, இலங்­கையின் உள்­நாட்டு நிர்­வா­கத்­திலோ அல்­லது நீதித்­து­றையின் செயற்­பா­டு­க­ளிலோ வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளிலோ அல்­லது சர்­வ­தேச நீதித்­துறை சார்ந்­த­வர்­களோ தலை­யி­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பாணந்துறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை என்ற தொனியில் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார். இத தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். மேலும் மங்கள சமரவீரவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அவரின் இந்தக் கூற்றை நிராகரிக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் இக்கருத்து அமைந்திருந்தது.

மேலும், இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவித தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.