Breaking News

பாதயாத்திரை : நிட்டம்புவவிலிருந்து கிரிபத்கொட நோக்கி



கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் 4ஆம் நாள் ஆனா இன்று நிட்டம்புவ நகரிலிருந்து கிரிபத்கொட வரை நடைபெறவுள்ளது.

மூன்றாவது நாள் யாத்திரை நேற்று காலை நெலும்தெனியவிலிருந்து நிட்டம்புவ வரை நடைபெற்றது.

இந்நிலையில் இன்றைய தினம் நிட்டம்புவ நகரில் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர்களை சேர்க்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதனால் அங்கு இருதரப்புக்குமிடையே பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.