Breaking News

சர்ச்சைக்­கு­ரிய விஷ ஊசி விவ­காரம்! - ஐவ­ர­டங்­கிய குழு



முன்னாள் போரா­ளி­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட சர்ச் சைக்­கு­ரிய விஷ ஊசி விவ­காரம் தொடர்­பி­லான மருத்­துவ பரி­சோதனை ஆய்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வைத்­திய கலா­நிதி சிவன் சுதன் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய குழு­வொன்றை வட மாகாண சுகாதார அமைச்சு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு பரிந்­துரை செய்­துள்­ளது.

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் உறுப்­பி­னர்கள் புனர்­வாழ்­விலும் தடுப்பு முகாம்­க­ளிலும் இருந்­த­போது ஏற்­றப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சர்ச்­சைக்­கு­ரிய விஷ ஊசி விவ­காரம் தொடர்­பாக வடக்கு மாகாண சபையின் 58ஆவது அமர்வில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் பலர் நோய்­வாய்ப்­ப­டு­வ­துடன் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டை­வ­தாக சந்­தே­கங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் முன்னாள் போரா­ளிகள் அனை­வரும் மருத்­துவ பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு உண்­மைத்­தன்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். இதற்­காக அனைத்து மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் முன்னாள் போரா­ளி­களின் பெயர்­வி­ப­ரங்­களை பதி­வு­செய்து தக­வல்­களை திரட்ட வேண்­டு­மென வட­மா­காண சபை உறுப்­பினர் து.ரவி­கரன் சமர்­பித்த பிரே­ரணை அனைத்து உறுப்­பி­னர்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து சர்­வ­தேச மருத்­துவ நிபு­ணர்கள் அடங்­கிய மருத்­துவ பரி­சோ­த­னையே தேவை­யாகும் என்ற கருத்­துக்­களும் வலுப்­பெற்­றி­ருந்­தன. அதே­ச­ம­யத்தில் தென்­னி­லங்­கையில் அதற்கு எதிர்ப்­புக்­களும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் சர்ச்­கைக்­கு­ரிய ஊசி விடயம் தொடர்­பான ஆய்வை மேற்­கொள்­வ­தற்கும் அது­தொ­டர்­பி­லான ஏனைய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கு­மாக வட­மா­காண சுகா­தார அமைச்­சா­னது யாழ்.வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் வைத்­தி­ய­க­லா­நிதி.சிவன் சுதன் தலை­மை­யி­லான ஐவர் அடங்­கிய நிபு­ணர்­கு­ழு­வொன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு பரிந்­துரை செய்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஒப்­பு­த­லைப்­பெற்று குறித்த குழுவின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அனு­ம­தியை வழங்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அதே­நேரம் குறித்த குழுவின் கண்­கா­ணிப்பின் கீழாக வடக்கு குழுவின் கண்காணிப்பின் கீழாக வடக்கு மாகாணங்களில் காணப்படும் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனியாக வைத்திய நிபுணர்களடங்கிய குழுக்களும் நியமிக்கப்படவுள்ளன.

மேலும், மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் முன்னாள் போராளிகள் தவறாது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.