Breaking News

பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இன்று திடீர் கூட்டம்- விமல் குற்றச்சாட்டு



கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியின் இறுதி நாளான இன்று (01) பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திடீரென கொழும்புக்கு விசேட கூட்டமொன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு உள்ள அதிகாரிகள் விசேட கூட்டத்துக்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதனால், கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று பாதுகாப்பில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இவ்வாறாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தெரியாதுள்ளதாகவும் இறுதிநாள் நிகழ்வுகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டியுள்ளார்.